|
|
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்; |
|
சேரி வரினும் ஆர முயங்கார்; |
|
ஏதிலாளர் சுடலை போலக் |
|
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு, |
|
நல் அறிவு இழந்த காமம் |
|
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே. |
உரை |
|
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும், |
|
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?- |
|
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை, |
|
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய |
|
யாஅ வரி நிழல், துஞ்சும் |
|
மா இருஞ் சோலை மலை இறந்தோரே. |
உரை |
|
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை |
|
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி |
|
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் |
|
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன |
|
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு |
|
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் |
|
வரைகோள் அறியாச் சொன்றி, |
|
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே. |
உரை |
|
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன் |
|
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, |
|
எல்லுறு பொழுதின் முல்லை மலரும் |
|
மாலை என்மனார், மயங்கியோரே: |
|
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் |
|
பெரும் புலர் விடியலும் மாலை; |
|
பகலும் மாலை-துணை இலோர்க்கே. |
உரை |
|
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
|
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின் |
|
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக் |
|
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி |
|
மரையினம் ஆரும் முன்றில் |
|
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. |
உரை |
|
வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன். |
|
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ |
|
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!- |
|
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை |
|
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை |
|
வம்ப நாரை சேக்கும் |
|
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே. |
உரை |
|
வரைவிடை வைத்துப் பிரிவான். ''இவள் வேறு படாமை ஆற்றுவி'' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார். |
|
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ, |
|
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய |
|
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும் |
|
சேய அம்ம, இருவாம் இடையே; |
|
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு, |
|
கோட் புலி வழங்கும் சோலை |
|
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே? |
உரை |
|
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லையார் |
|
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை |
|
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, |
|
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
|
தொண்டி அன்ன என் நலம் தந்து, |
|
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே. |
உரை |
|
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன் |
|
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே; |
|
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச் |
|
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் |
|
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி |
|
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் |
|
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே. |
உரை |
|
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன் |
|
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் |
|
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் |
|
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி, |
|
வாடை வந்ததன் தலையும், நோய் பொர, |
|
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக் |
|
கடல் ஆழ் கலத்தின் தோன்றி, |
|
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. |
உரை |
|
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கொல்லன் அழிசி. |
|