|
|
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய |
|
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள், |
|
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான், |
|
நள்ளென் யாமத்து, ''ஐ'' எனக் கரையும் |
|
அஞ்சுவரு பொழுதினானும், என் கண் |
|
துஞ்சா வாழி-தோழி!-காவலர் |
|
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என் |
|
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே. |
உரை |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
|
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, |
|
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை |
|
தானே இருக்க, தன் மனை; யானே, |
|
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க |
|
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு, |
|
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், |
|
கரும்பு நடு பாத்தி அன்ன, |
|
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே. |
உரை |
|
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ, |
|
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க, |
|
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா |
|
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி, |
|
''பேஎய்க் கொளீஇயள்'' இவள் எனப்படுதல் |
|
நோதக்கன்றே-தோழி!-மால் வரை |
|
மழை விளையாடும் நாடனைப் |
|
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே. |
உரை |
|
''அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?''எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது. - பெருஞ்சாத்தன் |
|
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை, |
|
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி, |
|
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு |
|
நயந்தனன் கொண்ட கேண்மை |
|
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே. |
உரை |
|
''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், ''ஆற்றுவல்'' என்றது. - கபிலர் |
|
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது, |
|
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் |
|
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட |
|
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு, |
|
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் |
|
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை |
|
யான் தனக்கு உரைத்தனென் ஆக, |
|
தான் நாணினன், இஃது ஆகாவாறே. |
உரை |
|
வரையாது பிரிந்த இடத்து, ''அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்'' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை |
|
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று |
|
இன்னா இரவின் இன் துணை ஆகிய |
|
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ- |
|
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத் |
|
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?- |
உரை |
|
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் |
|
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் |
|
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின் |
|
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன |
|
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க் |
|
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய, |
|
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும் |
|
உறல் முறை மரபின் கூற்றத்து |
|
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே. |
உரை |
|
''மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்'' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார் |
|
''சேறிரோ?'' எனச் செப்பலும் ஆற்றாம்; |
|
''வருவிரோ? என வினவலும் வினவாம்; |
|
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின் |
|
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு |
|
நடு நாள் என்னார், வந்து, |
|
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே. |
உரை |
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.- கருவூர்ச் சேரமான் சாத்தன் |
|
சேயாறு சென்று, துனைபரி அசாவாது, |
|
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல- |
|
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் |
|
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் |
|
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய |
|
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், |
|
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, |
|
''இனி வரின் எளியள்'' என்னும் தூதே. |
உரை |
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார் |
|
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென |
|
வீழ் உறை இனிய சிதறி, ஊழின் |
|
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் |
|
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே, |
|
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
|
இவளின் மேவினம் ஆகி, குவளைக் |
|
குறுந் தாள் நாள்மலர் நாறும் |
|
நறு மென் கூந்தல் மெல் அணையேமே. |
உரை |
|
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான். |
|