|
|
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், |
|
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், |
|
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- |
|
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; |
|
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, |
|
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், |
|
மறைத்தற் காலையோ அன்றே; |
|
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. |
உரை |
|
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது. |
|
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி |
|
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, |
|
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென, |
|
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து, |
|
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, |
|
மருவின் இனியவும் உளவோ? |
|
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே. |
உரை |
|
தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன் |
|
எல்லாம் எவனோ? பதடி வைகல்- |
|
பாணர் படுமலை பண்ணிய எழாலின் |
|
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ, |
|
பெய்த புலத்துப் பூத்த முல்லைப் |
|
பசு முகைத் தாது நாறும் நறு நுதல் |
|
அரிவை தோள்-அணைத் துஞ்சிக் |
|
கழிந்த நாள் இவண் வாழும் நாளே, |
உரை |
|
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார் |
|
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை |
|
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை, |
|
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின் |
|
நயன் உடைமையின் வருதி; இவள் தன் |
|
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது, |
|
கவை மக நஞ்சு உண்டாஅங்கு, |
|
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே. |
உரை |
|
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, ''இரா வாராவரைவல்'' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது. - கவைமகன் |
|
''சேறும் சேறும்'' என்றலின், பண்டைத் தம் |
|
மாயச் செலவாச் செத்து, ''மருங்கு அற்று |
|
மன்னிக் கழிக'' என்றேனே; அன்னோ! |
|
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
கருங் கால் வெண் குருகு மேயும் |
|
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே. |
உரை |
|
பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார் |
|
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர் |
|
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த |
|
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!- |
|
ஒரு நாள் துறைவன் துறப்பின், |
|
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே, |
உரை |
|
''நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின் |
|
நயன் இலர் ஆகுதல் நன்று'' என உணர்ந்த |
|
குன்ற நாடன்தன்னினும், நன்றும் |
|
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி! |
|
நம் மனை மட மகள், ''இன்ன மென்மைச் |
|
சாயலள்; அளியள்'' என்னாய், |
|
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே. |
உரை |
|
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
|
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி |
|
அலவன் சிறு மனை சிதைய, புணரி |
|
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் |
|
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே, |
|
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் |
|
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர் |
|
புலி நோக்கு உறழ் நிலை கண்ட |
|
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. |
உரை |
|
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, ''அவர் வரையும் நாள் அணித்து'' எனவும்,''அலர் அஞ்சல்'' எனவும் கூறியது. - பரணர் |
|
கான இருப்பை வேனில் வெண் பூ |
|
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, |
|
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் |
|
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, |
|
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, |
|
தெள் நீர் நிகர்மலர் புரையும் |
|
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, ''யான்'' ஆற்றுவல்'' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார் |
|
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத் |
|
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட |
|
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் |
|
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ |
|
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும் |
|
புன்கண் மாலையும், புலம்பும், |
|
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? |
உரை |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றன் |
|