|
|
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய் |
|
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, |
|
பசலை ஆகி, விளிவதுகொல்லோ- |
|
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், |
|
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, |
|
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு |
|
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே? |
உரை |
|
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது. |
|
தண் துளிக்கு ஏற்ற பைங் |
|
கொடி முல்லை |
|
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப் |
|
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல, |
|
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று, |
|
கார் இது பருவம் ஆயின், |
|
வாராரோ, நம் காதலோரே? |
உரை |
|
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று; வம்பு'' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன் |
|
நீ உடம்படுதலின், யான் தர, வந்து, |
|
குறி நின்றனனே, குன்ற நாடன்; |
|
''இன்றை அளவைச் சென்றைக்க என்றி; |
|
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத் |
|
தீ உறு தளிரின் நடுங்கி, |
|
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே. |
உரை |
|
உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது. - படுமரத்து மோசி கீரன் |
|
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள், |
|
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர் |
|
நலன் உண்டு துறத்தி ஆயின், |
|
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே. |
உரை |
|
''நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!'' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார் |
|
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை, |
|
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ |
|
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல் |
|
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் |
|
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் |
|
அன்றை அன்ன நட்பினன்; |
|
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே. |
உரை |
|
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர் |
|
வெண் மணல் விரிந்த வீ ததை கானல் |
|
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே, |
|
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும் |
|
மாலையோ அறிவேன்மன்னே; மாலை |
|
நிலம் பரந்தன்ன புன்கணொடு |
|
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே. |
உரை |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார் |
|
எல்லை கழிய, முல்லை மலர, |
|
கதிர் சினம் தணிந்த கையறு மாலை, |
|
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின், |
|
எவன்கொல் வாழி?-தோழி!- |
|
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே! |
உரை |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- கங்குல் வெள்ளத்தார் |
|
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை |
|
கோடை ஒற்றினும் வாடாதாகும்; |
|
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ |
|
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன |
|
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், |
|
யானை கைம்மடித்து உயவும் |
|
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே. |
உரை |
|
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார் |
|
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக |
|
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை- |
|
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர் |
|
''நன்றோ மகனே?'' என்றனென்; |
|
''நன்றே போலும்'' என்று உரைத்தோனே. |
உரை |
|
தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- வேட்ட கண்ணன் |
|
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்- |
|
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!- |
|
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென, |
|
வளை அணி நெடு வேல் ஏந்தி, |
|
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே. |
உரை |
|
புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது. - உறையூர் முதுகொற்றன் |
|