|
11
பாத்திரம் பெற்ற காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலைக்குத் தீவதிலகை
கோமுகி
என்னும் பொய்கையில் எழுந்த
பாத்திரம் கொடுத்த பாட்டு
]
|
|
|
|
|
|
மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்
|
|
|
மணிபல் லவத்திடை மணிமே கலைதான்
|
|
|
வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்
|
|
|
தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள்
நோக்கிக்
|
|
5
|
காவதம் திரியக் கடவுள் கோலத்துத்
|
உரை
|
|
|
|
|
தீவ திலகை செவ்வனந் தோன்றிக்
|
|
|
கலம்கவிழ் மகளிரின் வந்துஈங்கு எய்திய
|
|
|
இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்,
|
உரை
|
|
எப்பிறப் பகத்துள் யார்நீ என்றது
|
|
10
|
பொன்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய்
|
|
|
|
|
|
போய பிறவியில் பூமியங் கிழவன்
|
|
|
இராகுலன் மனையான் இலக்குமி என்பேர்
|
|
|
ஆய பிறவியில் ஆடலங் கணிகை
|
|
|
மாதவி ஈன்ற மணிமே கலையான்
|
|
15
|
என்பெயர்த் தெய்வம் ஈங்குஎனைக் கொணரஇம்
|
|
|
|
|
|
மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன்
|
|
|
ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது
|
|
|
பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும்,
|
உரை
|
|
ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த
|
|
20
|
தீவ திலகை செவ்வனம் உரைக்கும்
|
|
|
|
|
|
ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து
|
|
|
ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை
|
|
|
அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய
|
|
|
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
|
|
25
|
அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின்
|
|
|
|
|
|
தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப்
|
|
|
பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை
|
|
|
தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன்
|
|
|
தீவ திலகை என்பெயர் இதுகேள்:
|
உரை
|
30
|
தரும தலைவன் தலைமையின் உரைத்த
|
|
|
|
|
|
பெருமைசால் நல்அறம் பிறழா நோன்பினர்
|
|
|
கண்டுகை தொழுவோர் கண்டதன் பின்னர்ப்
|
|
|
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
|
|
|
அரியர் உலகத்து ஆகுஅவர்க்கு அறமொழி
|
|
35
|
உரியது உலகத்து ஒருதலை யாக
|
உரை
|
|
|
|
|
ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள்
|
|
|
ஈங்குஇப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது
|
|
|
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
|
|
|
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
|
உரை
|
40
|
இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து
|
|
|
|
|
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
|
|
|
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
|
|
|
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
|
|
|
ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்
|
|
45
|
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்
|
உரை
|
|
|
|
|
அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது
|
|
|
நின்ஆங்கு வருவது போலும் நேர்இழை
|
|
|
ஆங்குஅதின் பெய்த ஆர்உயிர் மருந்து
|
|
|
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
|
|
50
|
தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்
|
|
|
|
|
|
நறுமலர்க் கோதை நின்ஊர் ஆங்கண்
|
|
|
அறவணன் தன்பால் கேட்குவை இதன்திறம்
|
உரை
|
|
என்றுஅவள் உரைத்தலும், -இளங்கொடி விரும்பி
|
|
|
மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்
|
|
55
|
தீவ திலகை தன்னொடும் கூடிக்
|
|
|
|
|
|
கோமுகி வலம்செய்து கொள்கையின் நிற்றலும்
|
|
|
எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்
|
|
|
தொழுந்தகை மரபின் பாத்திரம் புகுதலும்.
|
|
|
பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்
|
|
60
|
மாத்திரை இன்றி மனமகிழ் எய்தி
|
உரை
|
|
|
|
|
மாரனை வெல்லும் வீர நின்அடி
|
|
|
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி
|
|
|
பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி
|
|
|
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி
|
|
65
|
எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி
|
|
|
|
|
|
கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி
|
|
|
தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்அடி
|
|
|
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி
|
|
|
நரகர் துயர்கெட நடப்போய் நின்அடி
|
|
70
|
உரகர் துயரம் ஒழிப்போய் நின்அடி
|
|
|
|
|
|
வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு
|
|
|
அடங்காது என்ற ஆயிழை முன்னர்,
|
உரை
|
|
போதி நீழல் பொருந்தித் தோன்றும்
|
|
|
நாதன் பாதம் நவைகெட ஏத்தித்
|
|
75
|
தீவ திலகை சேயிழைக்கும் உரைக்கும்:
|
உரை
|
|
|
|
|
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
|
|
|
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
|
|
|
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
|
|
|
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
|
|
80
|
பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்
|
|
|
|
|
|
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது
|
உரை
|
|
புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி
|
|
|
மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
|
|
|
அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்
|
|
85
|
இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்
|
|
|
|
|
|
அரும்பசி களைய ஆற்றுவது காணான்
|
|
|
திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்
|
|
|
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
|
|
|
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
|
|
90
|
மழைவளம் தருதலின் மன்உயிர் ஓங்கிப்
|
|
|
|
|
|
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ
|
உரை
|
|
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
|
|
|
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
|
|
|
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
|
|
95
|
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
|
|
|
|
|
|
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
|
|
|
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
|
|
|
கயக்குஅறு நல்அறம் கண்டனை என்றலும்,
|
உரை
|
|
விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்
|
|
100
|
திட்டி விடம்உணச் செல்உயிர் போவுழி
|
|
|
|
|
|
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
|
|
|
வெயில்விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய
|
|
|
சாது சக்கரன் தனையான் ஊட்டிய
|
|
|
காலம் போல்வதுஓர் கனாமயக்கு உற்றேன்
|
|
105
|
ஆங்குஅதன் பயனே ஆர்உயிர் மருந்தாய்
|
|
|
|
|
|
ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது
|
உரை
|
|
நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
|
|
|
வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்
|
|
|
துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர்
உடுத்து
|
|
110
|
வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி
|
|
|
|
|
|
வெயில்என முனியாது புயல்என மடியாது
|
|
|
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
|
|
|
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
|
|
|
ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்
|
|
115
|
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே
|
|
|
|
|
|
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
|
|
|
அகன்சுரைப் பெய்த ஆர்உயிர் மருந்துஅவர்
|
|
|
முகம்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என,
|
உரை
|
|
மறந்தேன் அதன்திறம் நீஎடுத்து உரைத்தனை
|
|
120
|
அறம்கரி யாக அருள்சுரந்து ஊட்டும்
|
|
|
|
|
|
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
|
|
|
ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை
|
|
|
ஈங்குநின்று எழுவாய் என்றுஅவள் உரைப்ப,
|
உரை
|
|
தீவ திலகை தன்அடி வணங்கி
|
|
125
|
மாபெரும் பாத்திரம் மலர்க்கையில்
ஏந்திக்
|
|
|
|
|
|
கோமகன் பீடிகை தொழுது வலம்கொண்டு
|
|
|
வான்ஊடு எழுந்து மணிமே கலைதான்
|
|
|
வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த
|
|
|
எழுநாள் வந்தது என்மகள் வாராள்
|
|
130
|
வழுவாய் உண்டுஎன மயங்குவோள் முன்னர்
|
|
|
|
|
|
வந்து தோன்றி,
|
|
|
அந்தில் அவர்க்குஓர் அற்புதம் கூறும்
|
உரை
|
|
இரவி வன்மன் ஒருபெரு மகளே
|
|
|
துரகத் தானைத் துச்சயன் தேவி
|
|
135
|
அமுத பதிவயிற்று அரிதில் தோன்றித்
|
|
|
|
|
|
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
|
|
|
அவ்வையர் ஆயினீர் நும்மடி தொழுதேன்
|
|
|
வாய்வ தாக மானிட யாக்கையில்
|
உரை
|
|
தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு
|
|
140
|
அறவண வடிகள் தம்பால் பெறுமின்
|
|
|
|
|
|
செறிதொடி நல்லீர் உம்பிறப்பு ஈங்குஇஃது
|
|
|
ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்
|
|
|
மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழும்எனத்
|
|
|
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்
|
|
145
|
பழுதுஅறு மாதவன் பாதம் படர்கேம்
|
|
|
|
|
|
எழுகென எழுந்தனள் இளங்கொடி தான்என்.
|
உரை
|
|
|
|
|
|
|
|
பாத்திரம் பெற்ற காதை
முற்றிற்று.
|
|
|