|
25
ஆபுத்திரனோடு மணிபல்லவம்
|
|
|
அடைந்த
காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திடை
|
|
|
அழைத்துப்
புத்தபீடிகைகாட்டிப் பிறப்பு உணர்த்திய
]
|
|
|
|
|
|
|
|
|
அரசன் உரிமையோடு
அப்பொழில் புகுந்து |
|
|
தரும சாவகன்
தன்அடி வணங்கி |
|
|
அறனும் மறனும்
அநித்தமும் நித்தத் |
|
|
திறனும்
துக்கமும் செல்உயிர்ப் புக்கிலும் |
|
5
|
சார்பில்
தோற்றமும் சார்புஅறுத்து உய்தியும் |
|
|
|
|
|
ஆரியன்
அமைதியும் அமைஉறக் கேட்டுப் |
உரை
|
|
பெண்ணிணை
இல்லாப் பெருவனப்பு உற்றாள் |
|
|
கண்இணை இயக்கமும்
காமனோடு இயங்கா |
|
|
அங்கையில்
பாத்திரம் கொண்டுஅறம் கேட்கும் |
|
10
|
இங்குஇணை
இல்லாள் இவள்யார் என்ன, |
உரை
|
|
|
|
|
காவலன்
தொழுது கஞ்சுகன் உரைப்போன் |
|
|
நாவலம்
தீவில்இந் நங்கையை ஒப்பார் |
|
|
யாவரும்
இல்லை இவள்திறம் எல்லாம் |
|
|
கிள்ளி
வளவனொடு கெழுதகை வேண்டிக் |
|
15
|
கள்அவிழ்
தாரோய் கலத்தொடும் போகிக் |
|
|
|
|
|
காவிரிப்
படப்பை நல்நகர் புக்கேன் |
|
|
மாதவன்
அறவணன் இவள்பிறப்பு உணர்ந்துஆங்கு |
|
|
ஓதினன்
என்றுயான் அன்றே உரைத்தேன் |
உரை
|
|
ஆங்குஅவள்
இவள்அவ் அகல்நகர் நீங்கி |
|
20
|
ஈங்கு வந்தனள்
என்றலும் இளங்கொடி |
|
|
|
|
|
நின்கைப்
பாத்திரம் என்கைப் புகுந்தது |
|
|
மன்பெருஞ்
செல்வத்து மயங்கினை அறியாய் |
|
|
அப்பிறப்பு
அறிந்திலை ஆயினும் ஆவயிற்று |
|
|
இப்பிறப்பு
அறிந்திலை என்செய் தனையோ |
உரை
|
25
|
மணிபல் லவம்வலம்
கொண்டால் அல்லது |
|
|
|
|
|
பிணிப்புஉறு
பிறவியின் பெற்றியை அறியாய் |
|
|
ஆங்கு வருவாய்
அரசநீ என்றுஅப் |
|
|
பூங்கமழ்
தாரோன் முன்னர்ப் புகன்று |
|
|
மைஅறு விசும்பின்
மடக்கொடி எழுந்து, |
உரை
|
30
|
வெய்யவன்
குடபால் வீழா முன்னர் |
|
|
|
|
|
வான்நின்று
இழிந்து மறிதிரை உலாவும் |
|
|
பூநாறு அடைகரை
எங்கணும் போகி |
|
|
மணிபல் லவம்வலம்
கொண்டு மடக்கொடி |
|
|
பிணிப்புஅறு
மாதவன் பீடிகை காண்டலும் |
|
35
|
தொழுதுவலம்
கொள்ளஅத் தூமணிப் பீடிகைப் |
|
|
|
|
|
பழுதுஇல்
காட்சி தன்பிறப்பு உணர்த்தக் |
உரை
|
|
காயங் கரைஎனும்
பேரியாற்று அடைகரை |
|
|
மாயம்இல்
மாதவன் தன்அடி பணிந்து |
|
|
தருமம் கேட்டுத்
தாள்தொழுது ஏத்திப் |
|
40
|
பெருமகன்
தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் |
|
|
|
|
|
விலங்கும்
நரகரும் பேய்களும் ஆக்கும் |
|
|
கலங்குஅஞர்த்
தீவினை கடிமின் கடிந்தால் |
|
|
தேவரும்
மக்களும் பிரமரும் ஆகுதிர் |
|
| ஆகலின்
நல்வினை அயராது ஓம்புமின் |
உரை
|
45
|
புலவன் முழுதும்
பொய்இன்று உணர்ந்தோன் |
|
|
|
|
|
உலகுஉயக்
கோடற்கு ஒருவன் தோன்றும் |
|
|
அந்நாள்
அவன்அறம் கேட்டோர் அல்லது |
|
|
இன்னாப்
பிறவி இழுக்குநர் இல்லை |
|
|
மாற்றுஅருங்
கூற்றம் வருவதன் முன்னம் |
|
50
|
போற்றுமின்
அறம்எனச் சாற்றிக் காட்டி |
|
|
|
|
|
நாக்கடிப்
பாக வாய்ப்பறை அறைந்தீர் |
உரை
|
|
அவ்வுரை
கேட்டுநும் அடிதொழுது ஏத்த |
|
|
வெவ்வுரை
எங்கட்கு விளம்பினிர் ஆதலின் |
|
|
பெரியவன்
தோன்றா முன்னர்இப் பீடிகை |
|
55
|
கரியவன்
இட்ட காரணம் தானும் |
|
|
|
|
|
மன்பெரும்
பீடிகை மாய்ந்துஉயிர் நீங்கிய |
|
|
என்பிறப்பு
உணர்த்தலும் என்என்று யான்தொழ |
உரை
|
|
முற்ற உணர்ந்த
முதல்வனை அல்லது |
|
|
மற்றப்
பீடிகை தன்மிசைப் பொறாஅது |
|
60
|
பீடிகை பொறுத்த
பின்னர் அல்லது |
|
|
|
|
|
வானவன்
வணங்கான் மற்றுஅவ் வானவன் |
|
|
பெருமகற்கு
அமைத்துப் பிறந்தார் பிறவியைத் |
|
|
தரும பீடிகை
சாற்றுக என்றே |
|
|
அருளினன்
ஆதலின் ஆயிழை பிறவியும் |
|
65
|
இருள்அறக்
காட்டும் என்றுஎடுத்து உரைத்தது |
|
|
|
|
|
அன்றே போன்றது
அருந்தவர் வாய்மொழி |
|
|
இன்றுஎனக்கு
என்றே ஏத்தி வலம்கொண்டு |
|
|
ஈங்குஇவள்
இன்னணம் ஆக, இறைவனும் |
உரை
|
|
ஆங்குஅப்
பொழில்விட்டு அகநகர்புக்குத |
|
70
|
தந்தை முனியாத்
தாய்பசு வாக |
|
|
|
|
|
வந்த பிறவியும்,
மாமுனி அருளால் |
|
|
குடர்த்தொடர்
மாலை சூழாது ஆங்குஓர் |
|
|
அடர்ப்பொன்
முட்டையுள் அடங்கிய வண்ணமும், |
|
|
மாமுனி அருளால்
மக்களை இல்லோன் |
|
75
|
பூமிசந்
திரன்கொடு போந்த வண்ணமும், |
|
|
|
|
|
ஆய்தொடி
அரிவை அமரசுந் தரிஎனும் |
|
|
தாய்வாய்க்
கேட்டுத் தாழ்துயர் எய்தி |
|
|
இறந்த பிறவியின்
யாய்செய் ததூஉம் |
|
|
பிறந்த
பிறவியின் பெற்றியும் நினைந்து |
உரை
|
80
|
செருவேல்
மன்னர் செவ்விபார்த்து உணங்க |
|
|
|
|
|
அரைசுவீற்
றிருந்து புரையோர்ப் பேணி |
|
|
நாடகம்
கண்டு பாடல் பான்மையில் |
|
|
கேள்வி
இன்னிசை கேட்டுத் தேவியர் |
|
|
ஊடல் செவ்வி
பார்த்துநீ டாது |
|
85
|
பாடகத் தாமரைச்
சீறடி பணிந்து |
|
|
|
|
|
தேமரு கொங்கையில்
குங்குமம் எழுதி |
|
|
அங்கையில்
துறுமலர் சுரிகுழல் சூட்டி |
|
|
நறுமுகை அமிழ்துஉறூஉம்
திருநகை அருந்தி |
|
|
மதிமுகக்
கருங்கண் செங்கடை கலக்கக் |
|
90
|
கருப்பு வில்லி
அருப்புக்கணை தூவத் |
|
|
|
|
|
தருக்கிய
காமக் கள்ளாட்டு இகழ்ந்து |
|
|
தூஅறத் துறத்தல்
நன்றுஎனச் சாற்றித் |
உரை
|
|
தெளிந்த
நாதன்என் செவிமுதல் இட்டவித்து |
|
|
ஏதம் இன்றாய்
இன்று விளைந்தது |
|
95
|
மணிமே கலைதான்
காரண மாகஎன்று |
|
|
|
|
|
அணிமணி
நீள்முடி அரசன் கூற, |
உரை
|
|
மனம்வே
றாயினன் மன்என மந்திரி |
|
|
சனமித்
திரன்அவன் தாள்தொழுது ஏத்தி, |
|
|
எம்கோ
வாழி என்சொல் கேள்மதி |
|
100
|
நும்கோன்
உன்னைப் பெறுவதன் முன்னாள் |
|
|
|
|
|
பன்னீ ராண்டுஇப்
பதிகெழு நல்நாடு |
|
|
மன்உயிர்
மடிய மழைவளம் கரந்துஈங்கு |
|
|
ஈன்றாள்
குழவிக்கு இரங்காள் ஆகித் |
|
|
தான்தனி
தின்னும் தகைமையது ஆயது |
உரை
|
105
|
காய்வெங்
கோடையில் கார்தோன் றியதுஎன |
|
|
|
|
|
நீதோன்
றினையே நிரைத்தார் அண்ணல் |
|
|
தோன்றிய
பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு |
|
|
வானம் பொய்யாது
மண்வளம் பிழையாது |
|
|
ஊன்உடை
உயிர்கள் உறுபசி அறியா |
|
110
|
நீஒழி காலை
நின்நாடு எல்லாம் |
|
|
|
|
|
தாய்ஒழி
குழவி போலக் கூஉம் |
உரை
|
|
துயர்நிலை
உலகம் காத்தல் இன்றிநீ |
|
|
உயர்நிலை
உலகம் வேட்டனை ஆயின் |
|
|
இறுதி உயிர்கள்
எய்தவும் இறைவ |
|
115
|
பெறுதி விரும்பினை
ஆகுவை அன்றே |
|
|
|
|
|
தன்உயிர்க்கு
இரங்கான் பிறஉயிர் ஓம்பும் |
|
|
மன்உயிர்
முதல்வன் அறமும்ஈ தன்றால் |
|
|
மதிமாறு ஓர்ந்தனை
மன்னவ என்றே |
|
|
முதுமொழி
கூற, முதல்வன் கேட்டு |
உரை
|
120
|
மணிபல் லவம்வலம்
கொள்வதற்கு எழுந்த |
|
|
|
|
|
தணியா வேட்கை
தணித்தற்கு அரிதால் |
|
|
அரசும் உரிமையும்
அகநகர்ச் சுற்றமும் |
|
|
ஒருமதி எல்லை
காத்தல்நின் கடன்எனக் |
உரை
|
|
கலம்செய்
கம்மியர் வருகெனக் கூஉய் |
|
125
|
இலங்குநீர்ப்
புணர் எறிகரை எய்தி |
|
|
|
|
|
வங்கம்
ஏறினன் மணிபல் லவத்திடைத் |
|
|
தங்காது
அக்கலம் சென்றுசார்ந்து இறுத்தலும் |
உரை
|
|
புரைதீர்
காட்சிப் பூங்கொடி பொருந்தி |
|
|
அரைசன்
கலம்என்று அகமகிழ்வு எய்திக் |
|
130
|
காவலன் தன்னொடும்
கடல்திரை உலாவும் |
|
|
|
|
|
தேமலர்ச்
சோலைத் தீவகம் வலம்செய்து |
|
|
பெருமகன்
காணாய் பிறப்புஉணர் விக்கும் |
|
|
தரும பீடிகை
இதுஎனக் காட்ட, |
உரை
|
|
வலங்கொண்டு
ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு |
|
135
|
உலந்த பிறவியை
உயர்மணிப் பீடிகை |
|
|
|
|
|
கையகத்து
எடுத்துக் காண்போர் முகத்தை |
|
|
மைஅறு மண்டிலம்
போலக் காட்ட |
உரை
|
|
என்பிறப்பு
அறிந்தேன் என்இடர் தீர்ந்தேன் |
|
|
தென்தமிழ்
மதுரைச் செழுங்கலைப் பாவாய் |
|
140
|
மாரி நடுநாள்
வயிறுகாய் பசியால் |
|
|
|
|
|
ஆர்இருள்
அஞ்சாது அம்பலம் அணைந்துஆங்கு |
|
|
இரந்துஊண்
வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு |
|
|
அருந்துஊண்
காணாது அழுங்குவேன் கையின் |
|
|
நாடுவறம்
கூரினும்இவ் ஓடுவறம் கூராது |
|
145
|
ஏடா அழியல்
எழுந்துஇது கொள்கென |
|
|
|
|
|
அமுத சுரபி
அங்கையில் தந்துஎன் |
|
|
பவம்அறு
வித்த வானோர் பாவாய்! |
|
|
உணர்வில்
தோன்றி உரைப்பொருள் உணர்த்தும் |
|
|
அணிதிகழ்
அவிர்ஒளி மடந்தை நின்அடி |
|
150
|
தேவர் ஆயினும்
பிரமர் ஆயினும் |
|
|
|
|
நாமாசு கழூஉம்
நலம்கிளர் திருந்துஅடி |
|
|
பிறந்த பிறவிகள்
பேணுதல் அல்லது |
|
|
மறந்து வாழேன்
மடந்தைஎன்று ஏத்தி, |
|
|
மன்னவன்
மணிமே கலையுடன் எழுந்து |
|
155
|
தென்மேற்
காகச் சென்று திரைஉலாம் |
|
|
|
|
|
கோமுகி
என்னும் பொய்கையின் கரைஓர் |
|
|
தூமலர்ப்
புன்னைத் துறைநிழல் இருப்ப |
உரை
|
|
ஆபுத் திரனோடு
ஆயிழை இருந்தது |
|
|
காவல் தெய்வதம்
கண்டுஉவந்து எய்தி |
|
160
|
அருந்துஉயிர்
மருந்துமுன் அங்கையில் கொண்டு |
|
|
|
|
|
பெருந்துயர்
தீர்த்தஅப் பெரியோய் வந்தனை |
|
|
அந்நாள்
நின்னை அயர்த்துப் போயினர் |
|
|
பின்நாள்
வந்துநின் பெற்றிமை நோக்கி |
|
|
நின்குறி
இருந்து தம்உயிர் நீத்தோர் |
|
165
|
ஒன்பது செட்டிகள்
உடல்என்பு இவைகாண் |
|
|
|
|
|
ஆங்குஅவர்
இடஉண்டு அவருடன் வந்தோர் |
|
|
ஏங்கிமெய்
வைத்தோர் என்பும் இவைகாண் |
உரை
|
|
ஊர்திரை
தொகுத்த உயர்மணல் புதைப்ப |
|
|
ஆய்மலர்ப்
புன்னை அணிநிழல் கீழால் |
|
170
|
அன்புஉடை
ஆர்உயிர் அரசற்கு அருளிய |
|
|
|
|
|
என்புஉடை
யாக்கை இருந்தது காணாய் |
உரை
|
|
நின்உயிர்
கொன்றாய் நின்உயிர்க்கு இரங்கிப் |
|
|
பின்நாள்
வந்த பிறர்உயிர் கொற்றாய் |
|
|
கொலைவன்
அல்லையோ கொற்றவன் ஆயினை. |
உரை
|
175
|
பலர்தொழு
பாத்திரம் கையின் ஏந்திய |
|
|
|
|
|
மடவரல் நல்லாய்
நின்தன் மாநகர் |
|
|
கடல்வயிறு
புக்கது காரணம் கேளாய்: |
உரை
|
|
நாக நல்நாடு
ஆள்வோன் தன்மகள் |
|
|
பீலிவளை
என்பாள் பெண்டிரின் மிக்கோள் |
|
180
|
பனிப்பகை
வானவன் வழியில் தோன்றிய |
|
|
|
|
|
புனிற்றுஇளங்
குழவியொடு பூங்கொடி பொருந்திஇத் |
|
|
தீவகம்
வலம்செய்து தேவர்கோன் இட்ட |
|
|
மாபெரும்
பீடிகை வலங்கொண்டு ஏத்துழி, |
உரை
|
|
கம்பளச்
செட்டி கலம்வந்து இறுப்ப |
|
185
|
அங்குஅவன்
பால்சென்று அவன்திறம் அறிந்து |
|
|
|
|
|
கொற்றவன்
மகன்இவன் கொள்கெனக் கொடுத்தலும் |
|
|
பெற்ற உவகையன்
பெருமகிழ்வு எய்திப் |
|
|
பழுதுஇல்
காட்சிப் பைந்தொடி புதல்வனைத் |
|
|
தொழுதனன்
வாங்கித் துறைபிறக்கு ஒழியக் |
|
190
|
கலங்கொண்டு
பெயர்ந்த அன்றே கார்இருள் |
|
|
|
|
|
இலங்குநீர்
அடைகரை அக்கலம் கெட்டது |
உரை
|
|
கெடுகல மாக்கள்
புதல்வனைக் கெடுத்தது |
|
|
வடிவேல்
கிள்ளி மன்னனுக்கு உரைப்ப, |
|
|
மன்னவன்
மகனுக்கு உற்றது பொறாஅன் |
|
195
|
நல்மணி
இழந்த நாகம் போன்று |
|
|
|
|
|
கானலும் கடலும்
கரையும் தேர்வுழி |
|
|
வானவன்
விழாக்கோள் மாநகர் ஒழிந்தது |
|
|
மணிமே கலாதெய்வம்
மற்றுஅது பொறாஅள் |
|
|
அணிநகர்
தன்னை அலைகடல் கொள்கென |
|
200
|
இட்டனள்
சாபம் பட்டது இதுவால் |
உரை
|
|
|
|
|
கடவுள் மாநகர்
கடல்கொளப் பெயர்ந்த |
|
|
வடிவேல்
தடக்கை வானவன் போல |
|
|
விரிதிரை
வந்து வியன்நகர் விழுங்க |
|
|
ஒருதனி போயினன்
உலக மன்னவன். |
|
205
|
அருந்தவன்
தன்னுடன் ஆயிழை தாயரும் |
|
|
|
|
|
வருந்தாது
ஏகி வஞ்சியுள் புக்கனர் |
|
|
பரப்புநீர்ப்
பௌவம் பலர்தொழக் காப்போள் |
|
|
உரைத்தன
கேட்க உறுகுவை ஆயின்நின் |
உரை
|
|
மன்உயிர்
முதல்வனை மணிமே கலாதெய்வம் |
|
210
|
முன்னாள்
எடுத்ததும் அந்நாள் ஆங்குஅவன் |
|
|
|
|
|
அறஅரசு ஆண்டதும்
அறவணன் தன்பால் |
|
|
மறுபிறப்
பாட்டி வஞ்சியுள் கேட்பைஎன்று |
|
|
அந்தரத்
தீவகத்து அருந்தெய்வம் போயபின், |
உரை
|
|
மன்னவன்
இரங்கி மணிமே கலையுடன் |
|
215
|
துன்னிய தூமணல்
அகழத் தோன்றி |
|
|
|
|
|
ஊன்பிணி
அவிழவும் உடல்என்பு ஒடுங்கித் |
|
|
தான்பிணி
அவிழாத் தகைமையது ஆகி |
|
|
வெண்சுதை
வேய்ந்துஅவன் இருக்கையின் இருந்த |
|
|
பண்புகொள்
யாக்கையின் படிவம் நோக்கி |
|
220
|
மன்னவன்
மயங்க, மணிமே கலைஎழுந்து |
உரை
|
|
|
|
|
என்உற்
றனையோ இலங்குஇதழ்த் தாரோய் |
|
|
நின்நாடு
அடைந்துயான் நின்னைஈங்கு அழைத்தது |
|
|
மன்னா நின்தன்
மறுபிறப்பு உணர்த்தி |
|
|
அந்தரத்
தீவினும் அகன்பெருந் தீவினும் |
|
225
|
நின்பெயர்
நிறுத்த நீள்நிலம் ஆளும் |
|
|
|
|
|
அரசர் தாமே
அருள்அறம் பூண்டால் |
|
|
பொருளும்
உண்டோ பிறபுரை தீர்த்தற்கு |
|
|
அறம்எனப்
படுவது யாதுஎனக் கேட்பின் |
|
|
மறவாது இதுகேள்
மன்உயிர்க்கு எல்லாம் |
|
230
|
உண்டியும்
உடையும் உறையுளும் அல்லது |
|
|
|
|
|
கண்டது இல்என,
காவலன் உரைக்கும |
உரை
|
|
என்நாட்
டாயினும் பிறர்நாட் டாயினும் |
|
|
நல்நுதல்
உரைத்த நல்அறம் செய்கேன் |
|
|
என்பிறப்பு
உணர்த்தி என்னைநீ படைத்தனை |
|
235
|
நின்திறம்
நீங்கல் ஆற்றேன் யான்என, |
|
|
|
|
|
புன்கண் கொள்ளல்நீ
போந்ததற்கு இரங்கிநின் |
|
|
மன்பெரு
நாடு வாய்எடுத்து அழைக்கும் |
|
|
வங்கத்து
ஏகுதி வஞ்சியுள் செல்வன்என்று |
|
|
அந்தரத்து
எழுந்தனள் அணியிழை தான்என். |
உரை
|
|
|
|
|
ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை
முற்றிற்று.
|
|
|