புணர்ச்சி
பயிற்சி - 3
Exercise 3
1. வாழை + பழம் = வாழைப்பழம் இதில் வந்துள்ள விகாரம்
அ) தோன்றல்
ஆ) திரிதல்
இ) கெடுதல்
ஈ) எதுவும் இல்லை
அ) தோன்றல்
2. கிழக்கு + நாடு = என்பது புணர்ச்சிப்படி வரும் நிலை
அ) கிழக்குநாடு
ஆ) கீழ்நாடு
இ) கிழநாடு
ஈ) கிழா நாடு
ஆ) கீழ்நாடு
3. வெண்மை + குடை = வெண்குடை எனப் புணர்ந்ததன் விதி
அ) ஆதிநீடல்
ஆ) இனம் மிகல்
இ) ஈறுபோதல்
ஈ) தன்னொற்று இரட்டல்
இ) ஈறுபோதல்
4. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” - என்ற வழக்கு எடுத்துக்காட்டு
அ) நிலாவழகு
ஆ) கடவுளருள்
இ) பூம்பாவை
ஈ) வெற்றிலை
ஆ) கடவுளருள்
5. “பைம்பொழில்” - என்ற எடுத்துக்காட்டுக்கு ஏற்ற புணர்ச்சி விதி
அ) முன்னின்ற மெய் திரிதல்
ஆ) இனம் மிகல்
இ) அடி அகரம் ‘ஐ’ ஆதல்
ஈ) இடையுகரம் இய்யாதல்
இ) அடி அகரம் ‘ஐ’ ஆதல்
6. பைங்கொடி - என்பதைப் புணர்ச்சி விதிப்படி பிரித்துக் காணும் முறைமை
அ) பைங் + கொடி
ஆ) பை + ங் + கொடி
இ) பசு + மை + கொடி
ஈ) பசுமை + கொடி
ஈ) பசுமை + கொடி
7. ‘உடம்படுமெய்’ - எனப்படும் மெய்யெழுத்துகள்
அ) ல - ழ
ஆ) ய், வ்
இ) க், ஞ்
ஈ) த், ப்
ஆ) ய், வ்
8. ‘தனிக் குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” - என்ற புணர்ச்சி விதிக்கு எடுத்துக்காட்டு
அ) கண்ணொளி
ஆ) தண்ணீர்
இ) கண்ணகி
ஈ) பன்னீர்
அ) கண்ணொளி
9. ‘பாய்புலி’ - இதில் வல்லினம் மிகாமைக்குக் காரணம்
அ) இது உம்மைத் தொகை
ஆ) இது விளித்தொடர்
இ) இது வினைத் தொகை
ஈ) இது இரட்டைக்கிளவி
இ) இது வினைத் தொகை
10. பத்து + பாட்டு = பத்துப்பாட்டு - இவ்வாறு வல்லெழுத்துமிக்குப் புணருவதற்குக் காரணம்
அ) இது முற்றியலுகரம்
ஆ) வன்தொடர்க் குற்றியலுகரம்
இ) இருபெயரொட்டு
ஈ) உவமைத்தொகை
ஆ) வன்தொடர்க் குற்றியலுகரம்