14. புணர்ச்சி

புணர்ச்சி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவது ------------ ஆகும்.

நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவது இயல்பு புணர்ச்சி ஆகும்

2.  நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது ஓர் எழுத்துத் தோன்றல் அல்லது திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அமைவது ---------- ஆகும்.

நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது ஓர் எழுத்துத் தோன்றல் அல்லது திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அமைவது விகாரப் புணர்ச்சி ஆகும்.

3.  ஒரு திசைப்பெயரோடு மற்றொரு திசைப்பெயரும் பிற பெயர்களும் சேருவதை ------------ என வழங்குவர்.

ஒரு திசைப்பெயரோடு மற்றொரு திசைப்பெயரும் பிற பெயர்களும் சேருவதை திசைப்பெயர்ப்புணர்ச்சி என வழங்குவர்.

4.  நன்மை, தீமை, வெண்மை, செம்மை போல்வன --------- பெயர்கள்.

நன்மை, தீமை, வெண்மை, செம்மை போல்வன மையீற்றுப்பண்புப் பெயர்கள்.

5.  ‘செம்மலர்’ என்பது --------- என்று பிரியும்.

‘செம்மலர்’ என்பது செம்மை + மலர் என்று பிரியும்.

6.  பூ + சோலை = பூஞ்சோலை என்று புணருவதற்குரிய விதி -------- என்பதாகும்.

பூ + சோலை = பூஞ்சோலை என்று புணருவதற்குரிய விதி பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் என்பதாகும்.

7.  தெங்கு + காய் = ------------ என வரும்.

தெங்கு + காய் = தேங்காய் என வரும்.

8.  வாழை + இலை = வாழையிலை என்று வரும் புணர்ச்சி -------.

வாழை + இலை = வாழையிலை என்று வரும் புணர்ச்சி உடம்படுமெய்ப் புணர்ச்சி. .

9.  உவமைத்தொகையில் வரும் வல்லினம் -----------.

உவமைத்தொகையில் வரும் வல்லினம் மிக்கு வரும்..

10.  அடுக்குத் தொடரில் வல்லினம் ------------.

அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது