முகப்பு |
கயமனார் |
12. பாலை |
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப் |
||
பாசம் தின்ற தேய் கால் மத்தம் |
||
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் |
||
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் |
||
5 |
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் |
|
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள், |
||
'இவை காண்தோறும் நோவர்மாதோ; |
||
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என |
||
நும்மொடு வரவு தான் அயரவும், |
||
10 |
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. | உரை |
தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.- கயமனார்
|
168. குறிஞ்சி |
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
||
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
||
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
||
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
||
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
||
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
||
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
||
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
||
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
279. பாலை |
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத் |
||
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, |
||
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், |
||
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப, |
||
5 |
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு |
|
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப, |
||
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை |
||
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, |
||
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச் |
||
10 |
சிலம்பு கழீஇய செல்வம் |
|
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே? | உரை | |
மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்
|
293. பாலை |
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன் |
||
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து, |
||
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் |
||
5 |
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், |
|
பெரு விதுப்புறுகமாதோ-எம் இற் |
||
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ, |
||
கொண்டு உடன் போக வலித்த |
||
வன்கண் காளையை ஈன்ற தாயே. | உரை | |
தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|
305. பாலை |
வரி அணி பந்தும், வாடிய வயலையும், |
||
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், |
||
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற, |
||
தமியே கண்ட தண்டலையும் தெறுவர, |
||
5 |
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி, |
|
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை |
||
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி, |
||
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி, |
||
இலங்கு இலை வெள் வேல் விடலையை |
||
10 |
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. | உரை |
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்
|
324. குறிஞ்சி |
அந்தோ! தானே அளியள் தாயே; |
||
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல், |
||
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?- |
||
கோடு முற்று யானை காடுடன் நிறைதர, |
||
5 |
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் |
|
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின், |
||
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி, |
||
அம் சில் ஓதி இவள் உறும் |
||
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே! | உரை | |
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|