முகப்பு |
நக்கீரர், நக்கீரனார் |
31. நெய்தல் |
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, |
||
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை |
||
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் |
||
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் |
||
5 |
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
|
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, |
||
யானும் இனையேன்-ஆயின், ஆனாது |
||
வேறு பல் நாட்டில் கால் தர வந்த |
||
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் |
||
10 |
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
|
உலவுத் திரை ஓதம் வெரூஉம் |
||
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்
|
86. பாலை |
அறவர், வாழி-தோழி! மறவர் |
||
வேல் என விரிந்த கதுப்பின் தோல |
||
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் |
||
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக் |
||
5 |
கை வல் வினைவன் தையுபு சொரிந்த |
|
சுரிதக உருவின ஆகிப் பெரிய |
||
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை |
||
நல் தளிர் நயவர நுடங்கும் |
||
முற்றா வேனில் முன்னி வந்தோரே! | உரை | |
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-நக்கீரர்
|
197. பாலை |
'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே |
||
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே; |
||
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ! |
||
தெளிந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என, |
||
5 |
ஆழல், வாழி-தோழி!-நீ; நின் |
|
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு, |
||
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய, |
||
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் |
||
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள் |
||
10 |
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் |
|
எயில் ஊர் பல் தோல் போலச் |
||
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே. | உரை | |
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-நக்கீரர்
|
258. நெய்தல் |
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ |
||
செல்வல்-கொண்க!-செறித்தனள் யாயே- |
||
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் |
||
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார், |
||
5 |
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த |
|
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட, |
||
அகல் அங்காடி அசை நிழல் குவித்த |
||
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை |
||
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் |
||
10 |
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் |
|
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇயது.-நக்கீரர்
|
340. மருதம் |
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- |
||
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் |
||
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, |
||
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை |
||
5 |
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
|
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, |
||
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, |
||
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் |
||
வாணன் சிறுகுடி அன்ன, என் |
||
10 |
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! | உரை |
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
|
358. நெய்தல் |
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, |
||
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, |
||
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, |
||
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம், |
||
5 |
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என, |
|
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய், |
||
பரவினம் வருகம் சென்மோ-தோழி!- |
||
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் |
||
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம் |
||
10 |
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் |
|
அரும் பெறல் ஆய் கவின் தொலைய, |
||
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே. | உரை | |
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.- நக்கீரர்
|
367. முல்லை |
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை |
||
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, |
||
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு |
||
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் |
||
5 |
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் |
|
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி |
||
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் |
||
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் |
||
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை |
||
10 |
இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
|
விரி உளை நன் மாக் கடைஇ, |
||
பரியாது வருவர், இப் பனி படு நாளே. | உரை | |
வரவு மலிந்தது-நக்கீரர்
|