முகப்பு |
ஓமை |
84. பாலை |
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும், |
||
திதலை அல்குலும் பல பாராட்டி, |
||
நெருநலும் இவணர் மன்னே! இன்றே, |
||
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர் |
||
5 |
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், |
|
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற |
||
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன |
||
உவர் எழு களரி ஓமை அம் காட்டு, |
||
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம் |
||
10 |
ஏகுவர் என்ப, தாமே-தம்வயின் |
|
இரந்தோர் மாற்றல் ஆற்றா |
||
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே. |
உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது.
|
107. பாலை |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப் |
||
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் |
||
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை, |
||
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் |
||
5 |
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், |
|
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம் |
||
சென்ற காதலர்வழி வழிப்பட்ட |
||
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து, |
||
ஆனாக் கௌவை மலைந்த |
||
10 |
யானே, தோழி! நோய்ப்பாலேனே. |
உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது
|
137. பாலை |
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல், |
||
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின் |
||
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று |
||
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை |
||
5 |
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, |
|
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர், |
||
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை |
||
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும் |
||
குன்ற வைப்பின் கானம் |
||
10 |
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! |
உரை |
தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்
|
198. பாலை |
சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து |
||
ஓமை நீடிய கான் இடை அத்தம், |
||
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள் |
||
கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை |
||
5 |
தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் |
|
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை, |
||
வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர், |
||
சில் வளை, பல் கூந்தலளே, அவளே; |
||
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை |
||
10 |
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் |
|
தந்தைதன் ஊர் இதுவே; |
||
ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே! |
உரை | |
பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-கயமனார்
|
252. பாலை |
'உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி, |
||
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம், |
||
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது, |
||
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்' என, |
||
5 |
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த |
|
வினை இடை விலங்கல போலும்-புனை சுவர்ப் |
||
பாவை அன்ன பழிதீர் காட்சி, |
||
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
10 |
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் |
|
நல் நாப் புரையும் சீறடி, |
||
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே! |
உரை | |
'பொருள்வயிற் பிரியும்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.-அம்மெய்யன் நாகனார்
|
279. பாலை |
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத் |
||
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, |
||
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், |
||
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப, |
||
5 |
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு |
|
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப, |
||
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை |
||
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, |
||
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச் |
||
10 |
சிலம்பு கழீஇய செல்வம் |
|
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே? |
உரை | |
மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்
|
318. பாலை |
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம் |
||
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த |
||
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக, |
||
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி, |
||
5 |
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை |
|
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர் |
||
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, |
||
என்றூழ் விடர் அகம் சிலம்ப, |
||
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே? |
உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ
|