முகப்பு |
புறா |
66. பாலை |
மிளகு பெய்தனைய சுவைய புன் காய் |
||
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட |
||
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன் |
||
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி, |
||
5 |
புன் புறா உயவும் வெந் துகள் இயவின், |
|
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும், |
||
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ- |
||
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும், |
||
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும், |
||
10 |
மாண் நலம் கையறக் கலுழும் என் |
|
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே? | உரை | |
மனை மருட்சி.-இனிசந்த நாகனார்
|
71. பாலை |
மன்னாப் பொருட் பிணி முன்னி, 'இன்னதை |
||
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து' எனப் |
||
பல் மாண் இரத்திர்ஆயின், 'சென்ம்' என, |
||
விடுநள் ஆதலும் உரியள்; விடினே, |
||
5 |
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, |
|
பிரிதல் வல்லிரோ-ஐய! செல்வர் |
||
வகை அமர் நல் இல் அக இறை உறையும் |
||
வண்ணப் புறவின் செங் காற் சேவல் |
||
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் |
||
10 |
நும் இலள் புலம்பக் கேட்டொறும் |
|
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே? | உரை | |
தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.-வண்ணப்புறக் கந்தரத்தனார்
|
162. பாலை |
'மனை உறை புறவின் செங் காற் பேடைக் |
||
காமர் துணையொடு சேவல் சேர, |
||
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் |
||
தனியே இருத்தல் ஆற்றேன்' என்று, நின் |
||
5 |
பனி வார் உண்கண் பைதல கலுழ, |
|
'நும்மொடு வருவல்' என்றி; எம்மொடு- |
||
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் |
||
யாயொடு நனி மிக மடவை!-முனாஅது |
||
வேனில் இற்றித் தோயா நெடு வீழ், |
||
10 |
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், |
|
துஞ்சு பிடி வருடும் அத்தம் |
||
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே? | உரை | |
'உடன் போதுவல்' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.
|
189. பாலை |
தம் அலது இல்லா நம் நயந்து அருளி |
||
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர், |
||
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ் |
||
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் |
||
5 |
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- |
|
எவ் வினை செய்வர்கொல் தாமே?-வெவ் வினைக் |
||
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய |
||
கானப் புறவின் சேவல் வாய் நூல் |
||
சிலம்பி அம் சினை வெரூஉம், |
||
10 |
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
|
305. பாலை |
வரி அணி பந்தும், வாடிய வயலையும், |
||
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், |
||
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற, |
||
தமியே கண்ட தண்டலையும் தெறுவர, |
||
5 |
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி, |
|
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை |
||
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி, |
||
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி, |
||
இலங்கு இலை வெள் வேல் விடலையை |
||
10 |
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. | உரை |
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்
|
314. பாலை |
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; |
||
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை; |
||
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி |
||
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில், |
||
5 |
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் |
|
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக் |
||
கழிவதாக, கங்குல்' என்று |
||
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய- |
||
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி |
||
10 |
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் |
|
புன் புறா வீழ் பெடைப் பயிரும் |
||
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே! | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.- முப்பேர் நாகனார்
|
384. பாலை |
பைம் புறப் புறவின் செங் காற் சேவல் |
||
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி |
||
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட |
||
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர் |
||
5 |
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் |
|
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த |
||
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப் |
||
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ: |
||
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு |
||
10 |
அருந் துயர் உழந்த காலை |
|
மருந்து எனப்படூஉம் மடவோளையே. | உரை | |
உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|