|
|
இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய, |
|
கண் போல் நீலம் சுனைதொறும் மலர, |
|
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின், |
|
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய, |
5 |
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, |
|
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக் |
|
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப, |
|
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப் |
|
புள் அறிவுறீஇயினகொல்லோ-தெள்ளிதின் |
10 |
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் |
|
புதல்வற் காட்டிப் பொய்க்கும் |
|
திதலை அல்குல் தேம் மொழியாட்கே? |
உரை |
|
வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.
|
|
''மனை உறை புறவின் செங் காற் பேடைக் |
|
காமர் துணையொடு சேவல் சேர, |
|
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் |
|
தனியே இருத்தல் ஆற்றேன்'' என்று, நின் |
5 |
பனி வார் உண்கண் பைதல கலுழ, |
|
''நும்மொடு வருவல்'' என்றி; எம்மொடு- |
|
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் |
|
யாயொடு நனி மிக மடவை!-முனாஅது |
|
வேனில் இற்றித் தோயா நெடு வீழ், |
10 |
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், |
|
துஞ்சு பிடி வருடும் அத்தம் |
|
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே? |
உரை |
|
''உடன் போதுவல்'' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.
|
|
உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்- |
|
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு |
|
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக் |
|
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப, |
5 |
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர, |
|
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி |
|
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல் |
|
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை, |
|
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் |
10 |
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று |
|
வைகுறு வனப்பின், தோன்றும் |
|
கைதைஅம் கானல் துறைவன் மாவே! |
உரை |
|
''உறை துறந்திருந்த புறவில், தனாது |
|
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக, |
|
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச் |
|
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்'' எனச் |
5 |
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்- |
|
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் |
|
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென, |
|
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ, |
|
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது |
10 |
மாறு புறக்கொடுக்கும் அத்தம், |
|
ஊறு இலராகுதல் உள்ளாமாறே. |
உரை |
|
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.
|
|
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது |
|
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன், |
|
''அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க'' எனக் |
|
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து, |
5 |
கிளையொடு மகிழும் குன்ற நாடன் |
|
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப, |
|
''நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு |
|
அன்ன ஆகுக'' என்னான்; |
|
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே. |
உரை |
|
நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.
|
|
பொன்னும் மணியும் போலும், யாழ நின் |
|
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்; |
|
போதும் பணையும் போலும், யாழ நின் |
|
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்: |
5 |
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் |
|
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை, |
|
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்; |
|
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின், |
|
யாதனின் பிரிகோ?-மடந்தை!- |
10 |
காதல் தானும் கடலினும் பெரிதே! |
உரை |
|
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.
|
|
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை |
|
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் |
|
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற |
|
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் |
5 |
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த |
|
பயன் தெரி பனுவற் பை தீர் பாண! |
|
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண் |
|
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் |
|
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த |
10 |
இறை ஏர் எல் வளைக் குறுமகள் |
|
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. |
உரை |
|
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
|
|
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
|
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
|
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
|
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
|
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
|
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
|
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? |
உரை |
|
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
|
''முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! |
|
வருவம்'' என்னும் பருவரல் தீர, |
|
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- |
|
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி |
5 |
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
|
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் |
|
வன் கை இடையன் எல்லிப் பரீஇ, |
|
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை |
|
மறுகுடன் கமழும் மாலை, |
10 |
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. |
உரை |
|
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
|
|
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள், |
|
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின், |
|
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள் |
|
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே; |
5 |
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; |
|
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர், |
|
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது |
|
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம் |
|
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே? |
உரை |
|
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.
|
|