தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P20222l5-2.5 தொகுப்புரை

2.5 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை களப்பிரருக்குப் பின் எழுந்த பக்தி
இலக்கியம் பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள். இந்தப்
பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து
கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப்
பாருங்கள்.
1)
களப்பிரர் யார்? என்பது பற்றியும், அவர்கள் காலத்துத்
தமிழகச் சூழ்நிலை என்ன? என்பது பற்றியும் அறிந்து
இருப்பீர்கள்.
2)
தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக் காலமே பக்தி இயக்கக்
காலம் என்று அறிந்து கொண்டிருப்பீர்கள்.
3)
தமிழகத்தின் தொன்மைச் சமயங்களான சைவமும்
வைணவமும் புறச் சமயங்களான சமண பௌத்தங்களை
வெற்றி கொண்டது எப்படி? - என்பதைத் தெரிந்து
கொண்டீர்கள்.
4)
தருக்க நெறியையும் அறவியலையுமே அறிவுப்
பூர்வமாக வற்புறுத்திய சமணரும் பௌத்தரும் பக்தி
நெறிக்குத் திரும்பியதற்கான காரணத்தையும் புரிந்து
கொண்டிருப்பீர்கள்.
5)
தமிழில் இடையறாத் தொடர்ச்சியுடைய ஓர் இலக்கிய
வகையாகத் திகழ்வது பக்தி இலக்கியம் ஆகும்.
அதற்கான மூலகாரணம் பக்தி இயக்கமே என்பது
தெளிவாகப் புலப்பட்டிருக்கும்.

1.
பக்தி இயக்க முன்னோடிகள் யாவர்?
2.
சமணர் பக்திநெறிக்குத் திரும்பியதற்குச் சான்றாக
இரண்டு நூல்களைக் குறிப்பிடுக.
3.
பக்தி இலக்கியம் என்றதும் நம் கண்முன் நிற்பவை
எவை?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:09:20(இந்திய நேரம்)