பக்திப் பாடல்கள்

இயேசு பெருமான்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  இறைவன் எந்த நிழல் போன்று இன்பம் தருபவன்?

இறைவன் மலர்கள் உள்ள மரத்தின் நிழல் போன்று இன்பம் தருபவன்.

2.  அறத்தின் வழியில் குருவாக வந்தவர் யார்?

அறத்தின் வழியில் குருவாக வந்தவர் இயேசு .

3.  இயேசுவின் திருவடிகள் எப்படிப்பட்டவை?

ஏசுவின் திருவடிகள் வளமையான மலர்கள் போன்றவை.

4.  வீரமாமுனிவர் இயற்றிய சில நூல்களைக் குறிப்பிடுக.

வீரமாமுனிவர் வேதியர் ஒழுக்கம், தேம்பாவணி, தொன்னூல் விளக்கம், சதுர் அகாரதி முதலிய நூல்களை இயற்றினார்

5.  மறை என்றால் என்ன?

மறை என்றால் வேதம் என்று பொருள்.

6.  வீரமாமுனிவர் எந்நாட்டைச் சேர்ந்தவர்?

வீரமாமுனிவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்

7.  வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

வீரமாமுனிவரின் இயற்பெயர் சோசப் பெசுகி.

8.  இயேசுநாதர் எதில் அறையப் பெற்றார்?

இயேசுநாதர் சிலுவையில் அறையப் பெற்றார்.

9.  வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் எது?

வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலை இயற்றினார்.

10.  சிவமலி தனிமுதல் யார்?

சிவமலி தனிமுதல் இயேசு பெருமான் ஆவார்.