அல்லா
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?
சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர்.
2. உமறுப்புலவர் பிறந்த ஊர் எது?
நாகலாபுரம்
3. உமறுப்புலவருக்குப் பொருள் உதவி செய்தவர் யார்?
உமறுப்புலவருக்குப் பொருள் உதவி செய்தவர் சீதக்காதி.
4. உலகத்தைக் காப்பவர் யார் என்று உமறுப்புலவர் கூறுகிறார்?
உலகத்தைக் காப்பவர் அல்லா.
5. ‘இறைவன் ஒருவனே’ என்ற கோட்பாடுள்ள சமயம் எது?
‘இறைவன் ஒருவனே’ என்ற கோட்பாடுள்ள சமயம் இசுலாம்.
6. இசுலாம் சமயத்தில் இறைவனுக்கு உருவம் உண்டா?
இசுலாம் சமயத்தில் இறைவனுக்கு உருவம் இல்லை.
7. மதித்திடாப் பேரொளி யார்?
மதித்திடாப் பேரொளி அல்லா.
8. சீறாப்புராணம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது??
அண்ணல் நபிகள் நாயகத்தின் வரலாற்றை அழகுறப் பாடுவது சீறாப்புராணம்.
9. ‘சீறத்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
‘சீறத்’ என்ற சொல்லின் பொருள் வரலாறு என்பதாகும்.
10. சீதக்காதியின் உதவி பெற்ற புலவர் யார்?
சீதக்காதியின் உதவி பெற்றவர் உமறுப்புலவர்.