சிவன்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. இளவேனில் காலத்தில் வீசும் காற்றின் பெயர் என்ன?
இளவேனில் காலத்தில் வீசும் காற்றின் பெயர் தென்றல்.
2. திருநாவுக்கரசர் இறைவனின் எப்பகுதியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இறைவனின் இணையடிகள் குளிர்ச்சியூட்டும் நிழலைப் போன்றது.
3. திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் என்ன?
திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் அப்பர்.
4. அப்பர் பாடிய திருமுறைகள் யாவை?
அப்பர் பாடியவை நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் ஆகும்.
5. ஈசன் என்பது எக்கடவுளைக் குறிக்கும்?
ஈசன் என்பது சைவக் கடவுளான சிவபெருமானைக் குறிக்கிறது.
6. வீணை என்பது எவ்வகைக் கருவி?
வீணை என்பது இசைக்கருவி வகையைச் சார்ந்தது.
7. குளிர்ந்த பொய்கையில் என்னென்ன இருந்ததாக திருநாவுக்கரசர் கூறுகிறார்?
குளிர்ந்த பொய்கையில் மலர்களும், வண்டுகளும் இருந்தன.
8. “மாசில் வீணையும்” என்று தொடங்கும் எந்தத் திருமுறையில் இடம் பெற்றுள்ளது?
ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
9. அப்பர் பாடல்கள் எந்தெந்த திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன?
கநான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன.
10. சிவபெருமான் எச்சமயக் கடவுள்?
சிவபெருமான் சைவ சமயக் கடவுள் ஆகும்.