16. அணி

அணி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  செய்யுளில் வரும் சொல்லும் பொருளும் அழகுற நின்ற செய்யுளை அழகுறச் செய்தலின் அது --------- எனப்பெறுகிறது.

செய்யுளில் வரும் சொல்லும் பொருளும் அழகுற நின்ற செய்யுளை அழகுறச் செய்தலின் அது அணி எனப்பெறுகிறது.

2.  யமகம், மடக்கு முதலான அணிகள் ---------.

யமகம், மடக்கு முதலான அணிகள் சொல்லணி.

3.  உவமை, உருவகம் முதலான அணிகள் ---------.

உவமை, உருவகம் முதலான அணிகள் பிரிமொழிச் சிலேடை.

4.  ஒரு சொல் அல்லது தொடர் பிரிந்து நின்று பொருள் தருவது--------.

ஒரு சொல் அல்லது தொடர் பிரிந்து நின்று பொருள் தருவது பிரிமொழிச் சிலேடை.

5.  ஒரு செய்யுளில் வந்த சொல்லே வந்து, தந்த பொருளைத் தருவது --------- அணியாகும்.

ஒரு செய்யுளில் வந்த சொல்லே வந்து, தந்த பொருளைத் தருவது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்

6.  இயல்பான, இயற்கையான நிகழ்வில் கவிஞர் தம் குறிப்பை ஏற்றி உரைப்பது ------------ என்னும் அணியாகும்.

இயல்பான, இயற்கையான நிகழ்வில் கவிஞர் தம் குறிப்பை ஏற்றி உரைப்பது தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

7.  “புலவரே! வாரும்! இரும்படியும்”- இது -------- அணியின் பாற்படும்.

“புலவரே! வாரும்! இரும்படியும்”- இது இரட்டுறமொழிதல் அணியின் பாற்படும்.

8.  புகழ்வது போல் பழித்தல் ------------ அணியாகும்.

புகழ்வது போல் பழித்தல் வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.

9. “புல்லரைக் காணாமல் இப்புல்லும் நுனி சாய்ந்ததோ?” - இப்பாடலடி ----------- அணியாகும்.

“புல்லரைக் காணாமல் இப்புல்லும் நுனி சாய்ந்ததோ?” - இப்பாடலடி தற்குறிப்பேற்றம் அணியாகும்.

10.  புலவர், தாம் வலியுறுத்த வந்த கருத்தை நேரடியாகக் கூறாமல் பிறிதொன்றைக் கூறி வலியுறுத்துவது -------- அணியாகும்.

புலவர், தாம் வலியுறுத்த வந்த கருத்தை நேரடியாகக் கூறாமல் பிறிதொன்றைக் கூறி வலியுறுத்துவது பிறிதுமொழிதலணி அணியாகும்.