18. பொது

பொது

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. பண்புத்தொகை, வினைத்தொகை ஆகியவற்றைப் பிரித்து எழுதுதல் கூடாது.

சரி

2.  துணைவினையைச் சேர்த்து எழுதக் கூடாது.

தவறு

3.  தலைப்புகளை மையத்தில் எழுதுதல் வேண்டும்.

சரி

4.  ல-ள-ழ - இவற்றின் ஒலிகள் ‘மயங்கொலிகள்’ எனப் பெறும்.

சரி

5.  ‘அளை’ என்னும் சொல்லின் பொருள் ‘கூப்பிடு’ என்பதாகும்.

தவறு

6. ‘விலங்கு’ என்னும் பொருள் தரும் சொல், தழை.

தவறு

7. ‘பரவை’ என்னும் சொல்லின் பொருள் ‘கடல்’ என்பதாகும்.

சரி

8.  மான் என்ற பொருள் தரும் சொல் ‘மரை’ ஆகும்.

சரி

9.  ‘நெருப்பு’ என்ற பொருளைத் தரும் சொல் ‘அணல்’ ஆகும்.

தவறு

10. ‘யானை கத்தும்’ - என்று கூறுவது மரபு பிழை.

சரி