Period / Ruler :
கி.பி.12-13ஆம் நூற்றாண்டு
Inscription / Copper :
பழமையான கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை.
Sculptures :
வளத்தி மலை நல்ஞானக்குன்று அல்லது நெடுஞ்சாங்குன்று என்றழைக்கப்படுகிறது. இக்குன்றின் இயற்கையாக அமைந்த குகைத்தளம் காணப்படுகிறது. இக்குகையில் பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.பார்சுவநாதர் நின்ற கோலத்தில் தாமரை மலரில் கால்கள் பதிந்தவாறு உள்ளது மற்றும் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையிலுள்ளது. வளத்தி ஜினாலயம் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம், மானஸ்தம்பம், மடப்பள்ளி ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது. கருவறையில் மூலவர் ஆதிநாதர் கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் மூன்று நிலைகளை உடையதாக உள்ளது. கோபுரத்தின் தளப்பகுதியில் வாயிற்காவலர்களின் சுதையுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. கோபுரத்தைக் கடந்து பலிபீடம், மானஸ்தபம் ஆகியவை அமைந்துள்ளன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப் பகுதி வரை கற்றளியாகவும், அதற்கு மேல் அமைந்துள்ள தளப்பகுதி சுதையாலும் அமைந்துள்ளது. விமானம் திராவிடபாணியில் ஏகதளத்தைப் பெற்றுள்ளது. மண்பங்கள் தூண்களைப் பெற்று விளங்குகின்றன.
Temple Structure :
கருவறையில் ஆதிநாதர் சிற்பம் உள்ளது. வளத்தி மலைக் குகையில் பார்சுவநாதர் நின்ற நிலை புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. தீர்த்தங்கரர்களின் செப்புத் திருமேனிகள் உலாப்படிமங்களாக உள்ளன. அவற்றுள், ஆதிநாதர், பார்சுவநாதர், தர்மதேவி, பத்மாவதி ஆகிய செப்புத்திருமேனிகள் குறிப்பிடத்தக்கவை. கோயிலின் ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவதீர்த்தங்கரர், சர்வாணயக்ஷர் ஆகிய மூன்று சிலைகளையும் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளச் செய்வர். கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியில் பழமையான ஆதிநாதர், தர்மதேவி, பத்மாவதி, பிரம்ம சாஸ்தா கற்சிலைகள் இருக்கின்றன.