முகப்பு |
அள்ளூர் நன்முல்லையார் |
32. குறிஞ்சி |
காலையும், பகலும், கையறு மாலையும், |
||
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் |
||
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்: |
||
மா என மடலொடு மறுகில் தோன்றித் |
||
தெற்றெனத் தூற்றலும் பழியே; |
||
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே. |
உரை | |
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார் |
67. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை |
||
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் |
||
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் |
||
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் |
||
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை | |
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
68. குறிஞ்சி |
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின் |
||
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும் |
||
அரும் பனி அற்சிரம் தீர்க்கும் |
||
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. |
உரை | |
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லை |
93. மருதம் |
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய், |
||
இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு |
||
அன்னையும் அத்தனும் அல்லரோ? |
||
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே? |
உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார் |
96. குறிஞ்சி |
'அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு |
||
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது |
||
நகை என உணரேன்ஆயின், |
||
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே, |
உரை | |
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை |
140. பாலை |
வேதின வெரிநின் ஓதி முது போத்து, |
||
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும் |
||
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து, |
||
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் |
||
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த இடத்து, 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லை. |
157. மருதம் |
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர் |
||
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்- |
||
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் |
||
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே. |
உரை | |
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
202. மருதம் |
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே! |
||
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் |
||
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு, |
||
இனிய செய்த நம் காதலர் |
||
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே! |
உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லை |
237. பாலை |
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ, |
||
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய |
||
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும் |
||
சேய அம்ம, இருவாம் இடையே; |
||
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு, |
||
கோட் புலி வழங்கும் சோலை |
||
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே? |
உரை | |
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை |