முகப்பு |
நக்கீரனார் |
78. குறிஞ்சி |
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி |
||
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி, |
||
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!- |
||
நோதக்கன்றே-காமம் யாவதும் |
||
நன்று என உணரார்மாட்டும் |
||
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே. |
உரை | |
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரனார் |
105. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக் |
||
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல் |
||
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் |
||
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும் |
||
சூர் மலை நாடன் கேண்மை |
||
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர் |
143. குறிஞ்சி |
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்; |
||
பழியும் அஞ்சும், பய மலை நாடன்; |
||
நில்லாமையே நிலையிற்று ஆகலின், |
||
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின் |
||
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத் |
||
தங்குதற்கு உரியது அன்று, நின் |
||
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். |
161. குறிஞ்சி |
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது, |
||
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப் |
||
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி, |
||
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ! |
||
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை |
||
ஆரம் நாறும் மார்பினன் |
||
மாரி யானையின் வந்து நின்றனனே? |
உரை | |
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர் |
266. பாலை |
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று |
||
இன்னா இரவின் இன் துணை ஆகிய |
||
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ- |
||
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத் |
||
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?- |
உரை | |
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் |
280. குறிஞ்சி |
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என் |
||
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப் |
||
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம் |
||
ஒரு நாள் புணரப் புணரின், |
||
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே. |
உரை | |
கழற்றெதிர்மறை -நக்கீரர் |
368. மருதம் |
மெல்லியலோயே! மெல்லியலோயே! |
||
நல் நாண் நீத்த பழி தீர் மாமை |
||
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின், |
||
சொல்ல கிற்றா மெல்லியலோயே! |
||
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே, |
||
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து |
||
இடிகரைப் பெரு மரம் போல, |
||
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே. |
உரை | |
வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது. - நக்கீரர் |