முகப்பு |
வேங்கை |
26. குறிஞ்சி |
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
||
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை |
||
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் |
||
தகாஅன் போலத் தான் தீது மொழியினும், |
||
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே- |
||
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய் |
||
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் |
||
கடுவனும் அறியும், அக் கொடியோனையே. |
உரை | |
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ |
47. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் |
||
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை |
||
எல்லி வருநர் களவிற்கு |
||
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே! |
உரை | |
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண்ணிலவினா |
96. குறிஞ்சி |
'அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு |
||
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது |
||
நகை என உணரேன்ஆயின், |
||
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே, |
உரை | |
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை |
134. குறிஞ்சி |
அம்ம வாழி-தோழி!-நம்மொடு |
||
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல- |
||
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப் |
||
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் |
||
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி, |
||
நிலம் கொள் பாம்பின், இழிதரும் |
||
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே. |
உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன் |
208. குறிஞ்சி |
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப் |
||
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை |
||
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார், |
||
நின்று கொய மலரும் நாடனொடு |
||
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே, |
உரை | |
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
241. குறிஞ்சி |
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம் |
||
கெழுதகைமையின் அழுதன-தோழி!- |
||
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர் |
||
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி, |
||
ஏறாது இட்ட ஏமப் பூசல் |
||
விண் தோய் விடரகத்து இயம்பும் |
||
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே. |
உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
247. குறிஞ்சி |
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்; |
||
திறவோர் செய்வினை அறவது ஆகும்; |
||
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என |
||
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை |
||
வீயா மென் சினை வீ உக, யானை |
||
ஆர் துயில் இயம்பும் நாடன் |
||
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே. |
உரை | |
கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். - சேந்தம்பூதன். |
266. பாலை |
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று |
||
இன்னா இரவின் இன் துணை ஆகிய |
||
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ- |
||
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத் |
||
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?- |
உரை | |
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் |
343. பாலை |
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள் |
||
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென- |
||
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை- |
||
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக் |
||
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை |
||
வாடு பூஞ் சினையின், கிடக்கும் |
||
உயர் வரை நாடனொடு பெயருமாறே. |
உரை | |
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன் |
355. குறிஞ்சி |
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே; |
||
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே; |
||
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று; |
||
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் |
||
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!- |
||
வேங்கை கமழும் எம் சிறுகுடி |
||
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே. |
உரை | |
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர் |