முகப்பு |
குவளை |
13. குறிஞ்சி |
மாசு அறக் கழீஇய யானை போலப் |
||
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் |
||
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் |
||
நோய் தந்தனனே - தோழி!- |
||
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே. |
உரை | |
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர் |
30. பாலை |
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல், |
||
பொய்வலாளன் மெய் உற மரீஇய |
||
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து, |
||
அமளி தைவந்தனனே; குவளை |
||
வண்டு படு மலரின் சாஅய்த்' |
||
தமியென்; மன்ற அளியென் யானே! |
உரை | |
'அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?' என வினாய தோழிக்குத் தலைமகள்,'யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலி |
59. பாலை |
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் |
||
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக் |
||
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் |
||
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும், |
||
சுரம் பல விலங்கிய அரும் பொருள் |
||
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே. |
உரை | |
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார் |
62. குறிஞ்சி |
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, |
||
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, |
||
ஐது தொடை மாண்ட கோதை போல, |
||
நறிய நல்லோள் மேனி |
||
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. |
உரை | |
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
167. முல்லை |
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், |
||
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ, |
||
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் |
||
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் |
||
'இனிது' எனக் கணவன் உண்டலின், |
||
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. |
உரை | |
கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
270. முல்லை |
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென |
||
வீழ் உறை இனிய சிதறி, ஊழின் |
||
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் |
||
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே, |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
இவளின் மேவினம் ஆகி, குவளைக் |
||
குறுந் தாள் நாள்மலர் நாறும் |
||
நறு மென் கூந்தல் மெல் அணையேமே. |
உரை | |
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான். |
291. குறிஞ்சி |
சுடு புன மருங்கில் கலித்த ஏனற் |
||
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
இசையின் இசையா இன் பாணித்தே; |
||
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே; |
||
அது புலந்து அழுத கண்ணே, சாரல் |
||
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை |
||
வண்டு பயில் பல் இதழ் கலைஇ, |
||
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
300. குறிஞ்சி |
குவளை நாறும் குவை இருங் கூந்தல், |
||
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், |
||
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன |
||
நுண் பல் தித்தி, மாஅயோயே! |
||
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே; |
||
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் |
||
கடல் சூழ் மண்டிலம் பெறினும், |
||
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார் |
321. குறிஞ்சி |
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், |
||
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், |
||
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- |
||
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; |
||
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, |
||
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், |
||
மறைத்தற் காலையோ அன்றே; |
||
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. |
உரை | |
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது. |
339. குறிஞ்சி |
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை |
||
உறை அறு மையின் போகி, சாரல் |
||
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் |
||
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல் |
||
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க் |
||
குவளை உண்கண் கலுழப் |
||
பசலை ஆகா ஊங்கலங்கடையே. |
உரை | |
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது. - பேயார் |
342. குறிஞ்சி |
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம் |
||
காவல் மறந்த கானவன், ஞாங்கர், |
||
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும் |
||
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக் |
||
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, |
||
நயந்தோர் புன்கண் தீர்க்கும் |
||
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே? |
உரை | |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார் |
346. குறிஞ்சி |
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு, |
||
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப, |
||
மன்றம் போழும் நாடன்-தோழி!- |
||
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், |
||
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், |
||
காலை வந்து, மாலைப் பொழுதில் |
||
நல் அகம் நயந்து, தான் உயங்கிச் |
||
சொல்லவும் ஆகாது அஃகியோனே. |
உரை | |
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன் |
388. குறிஞ்சி |
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை |
||
கோடை ஒற்றினும் வாடாதாகும்; |
||
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ |
||
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன |
||
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், |
||
யானை கைம்மடித்து உயவும் |
||
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே. |
உரை | |
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார் |