|
7 துயில் எழுப்பிய காதை |
|
|
||
|
[ மணிமேகலாதெய்வம் உவவனம்புகுந்து |
|
|
சுதமதியைத் துயில் எழுப்பிய பாட்டு ] |
|
|
||
|
மணிமே கலைதனை மணிபல் லவத்திடை |
|
|
மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி |
|
|
மணிமே கலைதனை மலர்ப்பொழில் கண்ட |
|
|
உதய குமரன் உறுதுயர் எய்திக் |
|
5
|
கங்குல் கழியில்என் கையகத் தாள்எனப் |
|
|
||
|
பொங்குமெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் |
|
|
முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே |
உரை |
|
கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் |
|
|
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும் |
|
10
|
மாரிவறங் கூரின் மன்உயிர் இல்லை |
|
|
||
|
மன்உயிர் எல்லாம் மண்ஆள் வேந்தன் |
|
|
தன்உயிர் என்னும் தகுதிஇன்று ஆகும் |
|
|
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த |
|
|
அவத்திறம் ஒழிகென்று அவன்வயின் உரைத்தபின், |
உரை |
15
|
உவவனம் புகுந்துஆங்கு உறுதுயில் கொள்ளும் |
|
|
||
|
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி |
|
|
இந்திர கோடணை இந்நகர்க் காண |
|
|
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் |
|
|
ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம் |
|
20
|
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின் |
|
|
||
|
விஞ்சையின் பெயர்த்துநின் விளங்குஇழை தன்னைஓர் |
|
|
வஞ்சம்இல் மணிபல் லவத்திடை வைத்தேன் |
உரை |
|
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்துஈங்கு |
|
|
இன்றுஏழ் நாளில் இந்நகர் மருங்கே |
|
25
|
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள் |
|
|
||
|
களிப்புமாண் செல்வக் காவல் பேர்ஊர் |
|
|
ஒளித்துஉரு எய்தினும் உன்திறம் ஒளியாள் |
|
|
ஆங்குஅவள் இந்நகர் புகுந்த அந்நாள் |
|
|
ஈங்கு நிகழ்வன ஏதுப் பலஉள |
உரை |
30
|
மாதவி தனக்குயான் வந்த வண்ணமும் |
|
|
||
|
ஏதம்இல் நெறிமகள் எய்திய வண்ணமும் |
|
|
உரையாய் நீஅவள் என்திறம் உணரும் |
|
|
திரைஇரும் பௌவத்துத் தெய்வம்ஒன்று உண்டுஎனக் |
|
|
கோவலன் கூறிஇக் கொடியிடை தன்னைஎன் |
|
35
|
நாமம் செய்த நல்நாள் நள்இருள் |
|
|
||
|
காமன் கையறக் கடுநவை அறுக்கும் |
|
|
மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே |
|
|
நனவே போலக் கனவகத்து உரைத்தேன் |
|
|
ஈங்குஇவ் வண்ணம் ஆங்குஅவட்கு உரைஎன்று |
|
40
|
அந்தரத்து எழுந்துஆங்கு அருந்தெய்வம் போயபின் |
உரை |
|
||
|
வெந்துயர் எய்திச் சுதமதி எழுந்துஆங்கு |
உரை |
|
அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு |
|
|
வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி |
|
|
ஆடல் புணர்க்கு அரங்கியல் மகளிரில் |
|
45
|
கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று |
|
|
||
|
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை |
|
|
கொளைவல் ஆயமோடு இசைகூட் டுண்டு |
|
|
வளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த |
|
|
வெம்மைவெய் துறாது தன்மையில் திரியவும் |
உரை |
50
|
பண்புஇல் காதலன் பரத்தமை நோனாது |
|
|
||
|
உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று |
|
|
தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர் |
|
|
விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும், |
உரை |
|
தளர்நடை ஆயமொடு தங்காது ஓடி |
|
55
|
விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி |
|
|
||
|
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக் |
|
|
குதலைச் செவ்வாய் குறுநடைப் புதல்வர்க்குக் |
|
|
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து |
|
|
தூபம் காட்டித் தூங்குதுயில் வதியவும், |
உரை |
60
|
இறைஉறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் |
|
|
||
|
காவுறை பறவையும் நாஉள் அழுந்தி |
|
|
விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று |
|
|
பழவிறல் மூதூர் பாயல்கொள் நடுநாள், |
உரை |
|
கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின் |
|
65
|
யாமம் கொள்பவர் ஏத்துஒலி அரவமும், |
உரை |
|
||
|
உறையுள்நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து |
|
|
நிறைஅழி யானை நெடுங்கூ விளியும், |
உரை |
|
தேர்வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் |
|
|
ஊர்காப் பாளர் எறிதுடி ஓதையும், |
உரை |
70
|
முழங்குநீர் முன்துறைக் கலம்புணர் கம்மியர் |
|
|
||
|
துழந்துஅடு கள்ளின் தோப்பிஉண்டு அயர்ந்து |
|
|
பழஞ்செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும், |
உரை |
|
அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை |
|
|
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப் |
|
75
|
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம் |
|
|
||
|
தீர்வினை மகளிர் குளன்ஆடு அரவமும், |
உரை |
|
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் |
|
|
புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்துக் |
|
|
கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்கென |
|
80
|
இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும், |
உரை |
|
||
|
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் |
|
|
கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் |
|
|
தம்துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் |
|
|
மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென |
|
85
|
நின்றுஎறி பலியின் நெடுங்குரல் ஓதையும், |
உரை |
|
||
|
பல்வேறு ஓதையும் பரந்துஒருங்கு இசைப்பக், |
உரை |
|
கேட்டுஉளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து |
|
|
முருந்துஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில் |
|
|
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி |
|
90
|
மிக்கமா தெய்வம் வியந்துஎடுத்து உரைத்த |
|
|
||
|
சக்கர வாளக் கோட்டத்து அங்கண் |
|
|
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் |
|
|
உலக அறவியின் ஒருபுடை இருத்தலும், |
உரை |
|
கந்துஉடை நெடுநிலைக் காரணம் காட்டிய |
|
95
|
அந்தில் எழுதிய அற்புதப் பாவை |
|
|
||
|
மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவத் |
|
|
திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் |
உரை |
|
இரவி வன்மன் ஒருபெரு மகளே |
|
|
துரகத் தானைத் துச்சயன் தேவி |
|
100
|
தயங்குஇணர்க் கோதைத் தாரை சாவுற |
|
|
||
|
மயங்கி யானைமுன் மன்உயிர் நீத்தோய் |
|
|
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே |
|
|
மாருத வேகனோடு இந்நகர் புகுந்து |
|
|
தாரை தவ்வை தன்னொடு கூடிய |
|
105
|
வீரை ஆகிய சுதமதி கேளாய் |
உரை |
|
||
|
இன்றுஏழ் நாளில் இடையிருள் யாமத்துத் |
|
|
தன்பிறப் பதனொடு நின்பிறப்பு உணர்ந்துஈங்கு |
|
|
இலக்குமி யாகிய நினக்குஇளை யாள்வரும் |
|
|
அஞ்சல்என்று உரைத்தது அவ்வுரை கேட்டு |
|
110
|
நெஞ்சம் நடுக்குறூஉம் நேர்இழை நல்லாள், |
உரை |
|
||
|
காவ லாளர் கண்துயில் கொள்ளத் |
|
|
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப |
|
|
வலம்புரிச் சங்கம் வறிதுஎழுந்து ஆர்ப்பப் |
|
|
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப் |
|
115
|
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப் |
|
|
||
|
பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்பப் |
|
|
பணைநிலைப் புரவி பலஎழுந்து ஆலப் |
|
|
பணைநிலைப் புள்ளும் பலஎழுந்து ஆலப் |
|
|
பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்பப் |
|
120
|
பூங்கொடி யார்கைப் புள்ஒலி சிறப்பக் |
|
|
||
|
கடவுள் பீடிகைப் பூப்பலி கடைகொளக் |
|
|
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக் |
|
|
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ |
|
|
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ |
|
125
|
ஊர்துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக் |
|
|
||
|
கார்இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும், |
உரை |
|
ஏஉறு மஞ்ஞையின் இனைந்ததுஅடி வருந்த |
|
|
மாநகர் வீதி மருங்கில் போகிப் |
|
|
போய கங்குலில் புகுந்ததை எல்லாம் |
|
130
|
மாதவி தனக்கு வழுஇன்று உரைத்தலும் |
|
|
||
|
நல்மணி இழந்த நாகம் போன்றுஅவள் |
|
தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப |
|
இன்உயிர் இழந்த யாக்கையில் இருந்தனள் |
|
|
துன்னியது உரைத்த சுதமதி தான்என். |
உரை |
|
||
|
துயில் எழுப்பிய காதை முற்றிற்று. |
|