|
|
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
|
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி, |
|
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே |
|
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது, |
|
குல்லைக் கண்ணி வடுகர் முனையது |
|
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர் |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், |
|
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே. |
உரை |
|
தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது. - மாமூலனார் |
|
எறும்பி அளையின் குறும் பல் சுனைய |
|
உலைக்கல் அன்ன பாறை ஏறி, |
|
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும் |
|
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே; |
|
அது மற்று அவலம் கொள்ளாது, |
|
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே. |
உரை |
|
''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஓதலாந்தையார் |
|
மாசு அறக் கழீஇய யானை போலப் |
|
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் |
|
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் |
|
நோய் தந்தனனே - தோழி!- |
|
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே. |
உரை |
|
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர் |
|
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த |
|
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப் |
|
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு |
|
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில், |
|
''நல்லோள் கணவன் இவன்'' எனப் |
|
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே. |
உரை |
|
''மடன்மா கூறும் இடனுமார் உண்டே'' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். ''மடலேறுவல்'' என்பதுபடச் சொல்லியது. - தொல் கபிலர் |
|
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு |
|
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய |
|
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல, |
|
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல் |
|
சேயிலை வெள் வேல் விடலையொடு |
|
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. |
உரை |
|
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார் |
|
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர் |
|
பொன் புனை பகழி செப்பம் கொண்மார், |
|
உகிர் நுதி புரட்டும் ஓசை போல, |
|
செங் காற் பல்லி தன் துணை பயிரும் |
|
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை |
|
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
மா என மடலும் ஊர்ப; பூ எனக் |
|
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப; |
|
மறுகின் ஆர்க்கவும் படுப; |
|
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே. |
உரை |
|
தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமல் கூறியது.- பேரெயின் முறுவலார் |
|
வேரல் வேலி வேர் கோட் பலவின் |
|
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! |
|
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல் |
|
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள் |
|
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! |
உரை |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர் |
|
எவ்வி இழந்த வறுமையர் பாணர் |
|
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று |
|
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து |
|
எல்லுறும் மௌவல் நாறும் |
|
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே? |
உரை |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர் |
|
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து, |
|
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், |
|
உரவோர் உரவோர் ஆக! |
|
மடவம் ஆக, மடந்தை, நாமே! |
உரை |
|
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கோப்பெருஞ் சோழன் |
|