|
|
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, |
|
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற; |
|
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
|
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் |
|
புலப்பில் போலப் புல்லென்று |
|
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே. |
உரை |
|
பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- அணிலாடு முன்றிலார் |
|
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக் |
|
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி |
|
விடரகத்து இயம்பும் நாட!- எம் |
|
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே? |
உரை |
|
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர் |
|
''செல்வார் அல்லர்'' என்று யான் இகழ்ந்தனனே; |
|
''ஒல்வாள் அல்லள்'' என்று அவர் இகழ்ந்தனரே: |
|
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல், |
|
நல்அராக் கதுவியாங்கு, என் |
|
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார் |
|
காலே பரி தப்பினவே; கண்ணே |
|
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே; |
|
அகல் இரு விசும்பின் மீனினும் |
|
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே. |
உரை |
|
இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
|
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி, |
|
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற |
|
மல்லல் ஊரன், ''எல்லினன் பெரிது'' என, |
|
மறுவரும் சிறுவன் தாயே; |
|
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே. |
உரை |
|
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது.- ஆலங்குடி வங்கனார் |
|
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன |
|
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ |
|
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து |
|
எருவின் நுண் தாது குடைவன ஆடி, |
|
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் |
|
புன்கண் மாலையும், புலம்பும், |
|
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? |
உரை |
|
பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன். |
|
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் |
|
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை |
|
எல்லி வருநர் களவிற்கு |
|
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே! |
உரை |
|
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண் நிலவினார் |
|
''தாதின் செய்த தண் பனிப் பாவை |
|
காலை வருந்தும் கையாறு ஓம்பு'' என, |
|
ஓரை ஆயம் கூறக் கேட்டும், |
|
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் |
|
நன்னுதல் பசலை நீங்க, அன்ன |
|
நசை ஆகு பண்பின் ஒரு சொல் |
|
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே? |
உரை |
|
பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார் |
|
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து |
|
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப! |
|
இம்மை மாறி மறுமை ஆயினும். |
|
நீ ஆகியர் எம் கணவனை; |
|
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. |
உரை |
|
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார் |
|
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் |
|
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் |
|
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து |
|
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப் |
|
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே. |
உரை |
|
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. - குன்றியனார் |
|