|
|
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள் |
|
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே |
|
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே, |
|
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து |
|
ஓர் ஏர் உழவன் போல, |
|
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே, |
உரை |
|
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. - ஓரேருழவனார் |
|
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்; |
|
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே- |
|
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க் |
|
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி |
|
தாய் காண் விருப்பின் அன்ன, |
|
சாஅய் நோக்கினள்-மாஅயோளே, |
உரை |
|
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார் |
|
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை |
|
கிளி குறைத்து உண்ட கூழை இருவி |
|
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என் |
|
உரம் செத்தும் உளெனே-தோழி!-என் |
|
நலம் புதிது உண்ட புலம்பினானே. |
உரை |
|
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன் |
|
அம்ம வாழி-தோழி!-நம்மொடு |
|
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல- |
|
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப் |
|
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் |
|
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி, |
|
நிலம் கொள் பாம்பின், இழிதரும் |
|
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே. |
உரை |
|
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன் |
|
''வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் |
|
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'' என, |
|
நமக்கு உரைத்தோரும் தாமே, |
|
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே. |
உரை |
|
''தலைமகன் பிரியும்'' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ. |
|
''காமம் காமம்'' என்ப; காமம் |
|
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக் |
|
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை |
|
குளகு மென்று ஆள் மதம் போலப் |
|
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. |
உரை |
|
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
|
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப, |
|
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து |
|
இரவலர் வாரா வைகல் |
|
பல ஆகுக!-யான் செலவுறு தகவே. |
உரை |
|
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே- |
|
எம் இல் அயலது ஏழில் உம்பர், |
|
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
|
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த |
|
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. |
உரை |
|
குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது; இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம். - கொல்லன் அழிசி |
|
மனை உறை கோழி குறுங் கால் பேடை, |
|
வேலி வெருகினம் மாலை உற்றென, |
|
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய |
|
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு |
|
இன்னாது இசைக்கும் அம்பலொடு |
|
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே. |
உரை |
|
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார். |
|
வேதின வெரிநின் ஓதி முது போத்து, |
|
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும் |
|
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து, |
|
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் |
|
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே? |
உரை |
|
பொருள்வயிற் பிரிந்த இடத்து, ''நீ ஆற்றுகின்றிலை'' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லையார். |
|