|
3
மலர்வனம் புக்க காதை
|
|
|
|
|
|
[
மலர்வனம்புக்க பாட்டு
]
|
|
|
|
|
|
வயந்த மாலைக்கு மாதவி உரைத்த
|
|
|
உயங்குநோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
|
|
|
மாமலர் நாற்றம் போல்மணி மேகலைக்கு
|
|
|
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
|
உரை |
5
|
தந்தையும் தாயும் தாம்நனி உழந்த
|
|
|
|
|
|
வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்பக்
|
|
|
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
|
|
|
மாதர் செங்கண் வரிவனப்பு அழித்துப்
|
|
|
புலம்புநீர் உருட்டிப் பொதியவிழ் நறுமலர்
|
|
10
|
இலங்குஇதழ் மாலையை இட்டுநீ ராட்ட,
|
உரை |
|
|
|
|
மாதவி மணிமே கலைமுகம் நோக்கித்
|
|
|
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
|
|
|
காமர் செங்கையில் கண்ணீர் மாற்றித்
|
|
|
தூநீர் மாலை தூத்தகை இழந்தது
|
|
15
|
நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்,
|
|
|
|
|
|
மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்
|
|
|
சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும்:
|
உரை |
|
குரவர்க்கு உற்ற கொடுந்துயர் கேட்டுத்
|
|
|
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
|
|
20
|
மணிமேக கலைதன் மதிமுகம் தன்னுள்
|
|
|
|
|
|
அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய
|
|
|
கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்
|
|
|
படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
|
|
|
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
|
|
25
|
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
|
உரை |
|
|
|
|
ஆங்ஙனம் அன்றியும் அணியிழை கேளாய்
|
|
|
ஈங்குஇந் நகரத்து யான்வருங் காரணம்:
|
உரை |
|
பாரா வாரம் பல்வளம் பழுநிய
|
|
|
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
|
|
30
|
இருபிறப் பாளன் ஒருமகள் உள்ளேன்
|
|
|
|
|
|
ஒருதனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு
|
|
|
ஆரா மத்திடை அலர்கொய் வேன்தனை
|
உரை |
|
மாருத வேகன்என் பான்ஓர் விஞ்சையன்
|
|
|
திருவிழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
|
|
35
|
பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்
|
|
|
|
|
|
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
|
|
|
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
|
|
|
எடுத்தனன் என்கொணடு் எழுந்தனன் விசும்பில்
|
|
|
படுத்தனன் ஆங்குஅவன் பான்மையேன் ஆயினேன்
|
|
40
|
ஆங்குஅவன் ஈங்குஎனை அகன்றுகண் மாறி
|
|
|
|
|
நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும்,
|
உரை |
|
மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்
|
|
|
தனித்துஅலர் கொய்யும் தகைமையள் அல்லள்
|
உரை |
|
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
|
|
45
|
இலவந் திகையின் எயில்புறம் போகின்
|
|
|
|
|
|
உலக மன்னவன் உழையோர் ஆங்குஉளர்.
|
உரை |
|
விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள்
|
|
|
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
|
|
|
பாடுவண்டு இமிரா பல்மரம் யாவையும்
|
|
50
|
வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்
|
|
|
|
|
|
கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்என்று
|
|
|
உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார்.
|
உரை |
|
வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த
|
|
|
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்.
|
|
55
|
தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை
|
|
|
|
|
|
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
|
|
|
மூப்புடை முதுமைய தாக்குஅணங்கு உடைய
|
|
|
மூப்புடை முதுமைய தாக்குஅணங்கு உடைய
|
உரை |
|
அருளும் அன்பும் ஆர்உயிர் ஓம்பும்
|
|
60
|
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
|
|
|
|
|
|
பகவனது ஆணையின் பல்மரம் பூக்கும்
|
|
|
உவவனம் என்பதுஒன்று உண்டு
|
உரை |
|
விளிப்புஅறை போகாது மெய்புறத்து இடூஉம்
|
|
|
பளிக்கறை மண்டபம் உண்டுஅதன் உள்ளது
|
|
65
|
தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த
|
|
|
|
|
|
தாமரைப் பீடிகை தான்உண்டு ஆங்குஇடின்
|
உரை |
|
அரும்புஅவிழ் செய்யும் அலர்ந்தன வாடா
|
|
|
சுரும்புஇனம் மூசா தொல்யாண்டு கழியினும்
|
|
|
மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய்
|
|
70
|
கடம்பூண்டுஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
|
|
|
|
|
|
ஆங்குஅவர் அடிக்குஇடின் அவர்அடி தான்உறும்
|
|
|
நீங்காது யாங்கணும் நினைப்பில ராய்இடின்
|
உரை |
|
ஈங்குஇதன் காரணம் என்னை என்றியேல்
|
|
|
சிந்தை இன்றியும் செய்வினை உறும்எனும்
|
|
75
|
வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
|
|
|
|
|
|
செய்வினை சிந்தை இன்றுஎனின் யாவதும்
|
|
|
எய்தாது என்போர்க்கு ஏது வாகவும்
|
|
|
பயம்கெழு மாமலர் இட்டுக் காட்ட
|
|
|
மயன்பணடு் இழைத்த மரபினது அதுதான்
|
உரை |
80
|
அவ்வனம் அல்லது அணியிழை நின்மகள்
|
|
|
|
|
|
செவ்வனம் செல்லும் செம்மை தான்இலள்
|
|
|
மணிமே கலையொடு மாமலர் கொய்ய
|
|
|
அணியிழை நல்லாய் யானும் போவல்என்று
|
|
|
அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி
|
|
85
|
மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ,
|
உரை |
|
|
|
|
சிமிலிக் கரண்டையன் நுழைகோல் பிரம்பினன்
|
|
|
தவல்அருஞ் சிறப்பின் அராந்தா ணத்துஉளோன்
|
|
|
நாணமும் உடையும் நன்கனம் நீத்துக்
|
|
|
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
|
|
90
|
உண்ணா நோன்போடு உயவல் யானையின்
|
|
|
|
|
|
மண்ணா மேனியன் வருவோன் தன்னை
|
|
|
வந்தீர் அடிகள்நும் மலர்அடி தொழுதேன்
|
|
|
எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ
|
|
|
அழுக்குஉடை யாக்கையில் புகுந்த நும்உயிர்
|
|
95
|
புழுக்கறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தாது
|
|
|
|
|
|
இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும்
|
|
|
தன்வயின் தரூஉம்என் தலைமகன் உரைத்தது
|
|
|
கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின்
|
|
|
விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே
|
|
100
|
உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன்
|
|
|
|
|
|
கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம்என
|
|
|
உண்ணா நோன்பி தன்னொடும் சூள்உற்று
|
|
|
உண்ம்என இரக்கும்ஓர் களிமகன் பின்னரும்
|
உரை |
|
கணவிரி மாலை கட்டிய திரணையன்
|
|
105
|
குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்
|
|
|
|
|
|
சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத்
|
|
|
ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
|
|
|
வெண்பலி சாந்தம் மெய்ம்முழுது உறீஇப்
|
|
|
பண்புஇல் கிளவி பலரொடும் உரைத்தாங்கு
|
|
110
|
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
|
|
|
|
|
|
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
|
|
|
ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி
|
|
|
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
|
|
|
மையல் உற்ற மகன்பின் வருந்திக்
|
|
115
|
கையறு துன்பம் கண்டுநிற் குநரும்,
|
உரை |
|
|
|
|
சுரியல் தாடி மருள்படு பூங்குழல்
|
|
|
பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை
|
|
|
ஒள்அரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
|
|
|
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
|
|
120
|
காந்தள்அம் செங்கை ஏந்துஇள வனமுலை
|
|
|
|
|
|
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
|
|
|
இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து
|
|
|
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
|
|
|
நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய
|
|
125
|
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்
|
உரை |
|
|
|
|
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
|
|
|
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
|
|
|
மைஅறு படிவத்து வானவர் முதலா
|
|
|
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
|
|
130
|
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
|
|
|
|
|
|
கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும்,
|
உரை |
|
விழவு ஆற்றுப் படுத்த கழிபெரு வீதியில்
|
|
|
பொன்நாண் கோத்த நன்மணிக் கோவை
|
|
|
ஐயவி அப்பிய நெய்அணி முச்சி
|
|
135
|
மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்
|
|
|
|
|
|
பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச்
|
|
|
செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
|
|
|
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
|
|
|
அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
|
|
140
|
தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்
|
|
|
|
|
|
தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப்
|
|
|
பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து
|
|
|
இலங்குதொடி நல்லார் சிலர்நின்று ஏற்றி
|
|
|
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
|
|
145
|
காண்மி னோஎனக் கண்டுநிற் குநரும்
|
உரை |
|
|
|
|
விராடன் பேர்ஊர் விசயனாம் பேடியைக்
|
|
|
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
|
|
|
மணிமே கலைதனை வந்துபுறம் சுற்றி,
|
|
|
அணியமை தோற்றத்து அருந்தவப் படுத்திய
|
|
150
|
தாயோ கொடியள் தகவுஇலள் ஈங்குஇவள்
|
உரை |
|
|
|
|
மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின்
|
|
|
நல்இள அன்னம் நாணாது ஆங்குஉள
|
|
|
வல்லுந கொல்லோ மடந்தை தன் நடை
|
|
|
மாமயில் ஆங்குஉள வந்துமுன் நிற்பன
|
|
155
|
சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்
|
|
|
|
|
|
பைங்கிளி தாம்உள பாவைதன் கிளவிக்கு
|
|
|
எஞ்சல கொல்லோ இசையுந அல்ல
|
|
|
என்றுஇவை சொல்லி யாவரும் இனைந்துஉக,
|
உரை |
|
செந்தளிர்ச் சேவடி நிலம்வடு உறாமல்
|
உரை |
160
|
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
|
|
|
|
|
|
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
|
|
|
நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும்
|
|
|
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
|
|
|
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
|
|
165
|
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
|
|
|
|
|
|
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
|
|
|
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
|
|
|
சித்திரச் செய்கைப் படாம்போர்த்
ததுவே
|
|
|
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
|
|
170
|
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
|
|
|
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமே கலைஎன்.
|
உரை |
|
|
|
|
மலர்வனம்
புக்க காதை முற்றிற்று..
|
|
|