பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
389

New Page 1

    ‘நெய்தற்காடு அலர்ந்தாற்போலே’

பக். 350.

    ‘சொன்ன காரியத்தைச் சடக்கெனச் செய்த நல்ல புத்திரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் தாய் தந்தையர்களைப் போன்று’

பக். 355.

    ‘பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்றிருக்கும் திருக்கோட்டியூர் நம்பியைப் போலே’

பக். 359.

    ‘குழந்தை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் தாயைப் போலே’

பக். 360.

    ‘சத்துவகுணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப்பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து, சத்துவம் தலையெடுத்தவாறே வருந்துமாறு போன்று’

பக். 361.

    ‘புருடோசத்தை நாய் தீண்டினாற்போன்று’

பக். 361.

    ‘ஓட்டு அற்ற செம்பொன் போன்று’

பக். 364.

    ‘பெருவிலையனாய் முடிந்து ஆளலாம்படி கைப்புகுந்து புகழையுடைத்தான நீலமணி போல’

பக். 366.