1.5
தொகுப்புரை
நந்தம்
தமிழ் மொழியின் இயல்பு; அது மூவகைப்படும்; இயற்றமிழில் இலக்கணம் அடங்கும்;
இலக்கியங்களோடு இலக்கணம் வகுக்கப் பெற்றது; இலக்கணம் என்பதன் பொருள்;
இலக்கணம் காலந்தோறும் வளர்ச்சியுற்று இந் நாளில் ஆறு வகைமையில் விரிந்து
நிற்கின்றது; அகம்-புறம் என்பவற்றின் பொருள்; இவற்றுள் புறப்பொருள்
தொல்காப்பியர் காலத்தில் ஏழாக வகைமையுற்று, அவர் காலத்திலேயே பன்னிரண்டு
பகுதியாகவும் வளர்ச்சி கண்டது; அவ்வளர்ச்சியை ஏற்றுச் செய்யப்பட்ட
வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை; புறப்பொருள் வெண்பா மாலையின் நூற்பெயர்க்
காரணம்; அதன் சிறப்பு; இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர், மரபு, சமயம்,
காலம் ஆகியவை; போர் நிகழ்வு; உலக இயற்கை; போர்க்கான காரணங்கள்;தமிழ்
மன்னரிடத்து அறப்போர் நிலவியது; மன்னர்கள் போர்க்கு முன்னரும் போர்க்
களத்திலும் கடைப்பிடித்த அறநெறிகள்; அவற்றுள் ஒன்றே ‘ஆநிரை கவர்தல்’
முதலியவை விரித்துக் கூறப்பட்டன. திணை-துறைகட்கு உரிய பொருள்கள்; போர்
ஒழுகலாற்றின் படிநிலைகள்; ஆசிரியர் நூலை இயற்றிய திறம்; உரையாசிரியர்
பெயர், பிறப்பிடம், காலம், உரைப்போக்கு முதலியவையும் இப்பாடத்தில்
விளக்கப்பட்டுள்ளன.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1) |
புறப்பொருள்
வெண்பா மாலை பெயர்க்காரணம் தருக. |
விடை |
2) |
புறப்பொருள்
வெண்பா மாலை எத்தனை படலங்களை உடையது? அவை யாவை? |
விடை |
3) |
அகம்,
புறம் என்பதன் பொருள் என்ன? இலக்கணக் குறிப்புத் தருக. |
விடை |
4) |
தொல்காப்பியர்
கூறும் அகத்திணை எத்தனை? புறத்திணை எத்தனை? ஏன்? |
விடை |
5) |
போர்க்கான
பொதுக் காரணங்கள் மூன்றனைக் குறிக்க. |
விடை |
6) |
போர்க்காலத்தில்
காக்கப்பட வேண்டியவர்கள் சிலரைக் குறிக்க. |
விடை |
7) |
பாடாண்திணையாவது
யாது? விளக்குக. |
விடை |
8) |
புறம்,
புறப்புறம், அகப்புறம் ஆகியவற்றுள் அடங்கும் திணைகள் யாவை? |
விடை |
9) |
புறப்பொருள்
வெண்பா மாலையில் வரும் ‘கொளு’ என்பது யாது? |
விடை |
|