யாப்பு
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. தமிழின் நான்காவது இலக்கணக் கூறு எது?
தமிழின் நான்காவது இலக்கணக் கூறு யாப்பிலக்கணம்.
2. குறில் தனித்து வருவது எவ்வகை அசை
குறில் தனித்து வருவது நேரசை.
3. இரு குறில் இணைந்து வந்தால் எவ்வகை அசை?
இரு குறில் இணைந்து வந்தால் நிரையசை.
4. ஓரசைச் சீர்கள் எத்தனை?
ஓரசைச் சீர்கள் இரண்டு.
5. கனிச்சீர்கள் எத்தனை?
கனிச்சீர்கள் நான்கு.
6. வெண்பாவின் இறுதியில் அமையும் வாய்பாடுகள் எத்தனை?
வெண்பாவின் இறுதியில் அமையும் வாய்பாடுகள் நான்கு.
7. நெடிலடி என்றால் என்ன?
நெடிலடி என்பது ஐந்து சீர்கள்.
8. இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எவ்வகைத் தொடை?
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை.
9. பாடலில் ஓரடியில் இடமிருந்து வலமாகக் காண்பது எவ்வகை இலக்கணம்?
பாடலின் ஓரடியில் இடமிருந்து வலமாகக் காண்பது தொடை விகற்பம்
10. ஆசிரியப்பாவுக்கு உரிய ஓசை எது?
ஆசிரியப்பாவுக்கு உரிய ஓசை அகவல் ஓசை.