முகப்பு |
இளங்கீரனார் |
3. பாலை |
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப் |
||
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல், |
||
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து, |
||
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் |
||
5 |
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் |
|
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை |
||
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய |
||
வினை முடித்தன்ன இனியோள் |
||
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே? | உரை | |
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்
|
62. பாலை |
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை |
||
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன |
||
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து, |
||
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து, |
||
5 |
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று, |
|
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், |
||
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள், |
||
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப |
||
உலவை ஆகிய மரத்த |
||
10 |
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? | உரை |
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்
|
113. பாலை |
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் |
||
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் |
||
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் |
||
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்- |
||
5 |
'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே |
|
சேறும், மடந்தை!' என்றலின், தான் தன் |
||
நெய்தல் உண்கண் பைதல் கூர, |
||
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து, |
||
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் |
||
10 |
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் |
|
ஆம்பல்அம் குழலின் ஏங்கி, |
||
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே! | உரை | |
இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.-இளங்கீரனார்
|
266. முல்லை |
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த |
||
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ |
||
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் |
||
அகலுள் ஆங்கண் சீறூரேமே; |
||
5 |
அதுவே சாலும் காமம்; அன்றியும், |
|
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று |
||
கூறுவல்-வாழியர், ஐய!-வேறுபட்டு |
||
இரீஇய காலை இரியின், |
||
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே? | உரை | |
தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம்.-கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
|
308. பாலை |
செல விரைவுற்ற அரவம் போற்றி, |
||
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- |
||
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், |
||
வேண்டாமையின் மென்மெல வந்து, |
||
5 |
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, |
|
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப் |
||
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, |
||
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு, |
||
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம் |
||
10 |
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் |
|
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே. | உரை | |
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|
346. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
தண் கார் தலைஇய நிலம் தணி காலை, |
||
அரசு பகை நுவலும் அரு முனை இயவின், |
||
அழிந்த வேலி அம் குடிச் சீறூர் |
||
5 |
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, |
|
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை, |
||
இன்று, நக்கனைமன் போலா-என்றும் |
||
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் |
||
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் |
||
10 |
கடி பதம் கமழும் கூந்தல் |
|
மட மா அரிவை தட மென் தோளே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|