முகப்பு |
கண்டல் |
54. நெய்தல் |
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ, |
||
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை |
||
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து- |
||
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி: |
||
5 |
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; |
|
அது நீ அறியின், அன்புமார் உடையை; |
||
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை |
||
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர் |
||
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் |
||
10 |
தெண் திரை மணிப் புறம் தைவரும் |
|
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே! |
உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங் கண்ணனார்
|
74. நெய்தல் |
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
||
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
||
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
||
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
||
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் |
||
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
||
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
||
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
||
10 |
கண்டல் வேலிய ஊர், 'அவன் |
|
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! |
உரை | |
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
123. நெய்தல் |
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி |
||
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி |
||
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும் |
||
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை, |
||
5 |
கானல் ஆயமொடு காலைக் குற்ற |
|
கள் கமழ் அலர தண் நறுங் காவி |
||
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, |
||
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி, |
||
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் |
||
10 |
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் |
|
சிறு விளையாடலும் அழுங்கி, |
||
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே. |
உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்
|
191. நெய்தல் |
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் |
||
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த |
||
வண்டற் பாவை வன முலை முற்றத்து, |
||
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் |
||
5 |
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, |
|
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி, |
||
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும் |
||
என் நோக்கினளே அன்னை; நாளை |
||
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின், |
||
10 |
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி |
|
நறும் பூங் கானல் வந்து, அவர் |
||
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே. |
உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்
|
207. நெய்தல் |
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை |
||
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் |
||
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென, |
||
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே; |
||
5 |
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி |
|
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல், |
||
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
||
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின் |
||
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள், |
||
10 |
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் |
|
திரை எழு பௌவம் முன்னிய |
||
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே. |
உரை | |
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
|
345. நெய்தல் |
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய் |
||
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென, |
||
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல், |
||
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன, |
||
5 |
வெளிய விரியும் துறைவ! என்றும், |
|
அளிய பெரிய கேண்மை நும் போல், |
||
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் |
||
தேறா நெஞ்சம் கையறுபு வாட, |
||
நீடின்று விரும்பார் ஆயின், |
||
10 |
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே! |
உரை |
தெளிவிடை விலங்கியது.-நம்பி குட்டுவனார்
|
372. நெய்தல் |
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு |
||
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், |
||
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, |
||
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, |
||
5 |
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
|
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட |
||
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, |
||
அன்னை தந்த அலங்கல் வான் கோடு |
||
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு |
||
10 |
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து, |
|
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் |
||
திண் திமில் விளக்கம் எண்ணும் |
||
கண்டல் வேலிக் கழி நல் ஊரே. |
உரை | |
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்
|