முகப்பு |
நொச்சி |
115. முல்லை |
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க |
||
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர், |
||
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த் |
||
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என, |
||
5 |
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
|
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ, |
||
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர் |
||
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர் |
||
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ் |
||
10 |
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; |
|
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே? | உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.
|
184. பாலை |
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும் |
||
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு |
||
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்; |
||
'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று |
||
5 |
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! |
|
உள்ளின் உள்ளம் வேமே-உண்கண் |
||
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் |
||
அணி இயற் குறுமகள் ஆடிய |
||
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. | உரை | |
மனை மருட்சி
|
200. மருதம் |
கண்ணி கட்டிய கதிர அன்ன |
||
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், |
||
'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ! |
||
5 |
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- |
|
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் |
||
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி, |
||
'கை கவர் நரம்பின் பனுவற் பாணன் |
||
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று, |
||
10 |
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் |
|
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே. | உரை | |
தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, 'இங்ஙனம் சொல்லாயோ?' என்று குயவற்குச் சொல்லியது.-கூடலூர்ப் பல் கண்ணனார்
|
267. நெய்தல் |
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண |
||
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, |
||
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் |
||
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் |
||
5 |
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்- |
|
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல், |
||
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என, |
||
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய; |
||
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப, |
||
10 |
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், |
|
'இவை மகன்' என்னா அளவை, |
||
வய மான் தோன்றல் வந்து நின்றனனே. | உரை | |
தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்
|
293. பாலை |
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன் |
||
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து, |
||
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் |
||
5 |
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், |
|
பெரு விதுப்புறுகமாதோ-எம் இற் |
||
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ, |
||
கொண்டு உடன் போக வலித்த |
||
வன்கண் காளையை ஈன்ற தாயே. | உரை | |
தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|
305. பாலை |
வரி அணி பந்தும், வாடிய வயலையும், |
||
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், |
||
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற, |
||
தமியே கண்ட தண்டலையும் தெறுவர, |
||
5 |
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி, |
|
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை |
||
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி, |
||
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி, |
||
இலங்கு இலை வெள் வேல் விடலையை |
||
10 |
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. | உரை |
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்
|