முகப்பு |
பன்றி (கேழல்) |
82. குறிஞ்சி |
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த |
||
வேய் வனப்புற்ற தோளை நீயே, |
||
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி! |
||
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின் |
||
5 |
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- |
|
போகிய நாகப் போக்கு அருங் கவலை, |
||
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் |
||
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண, |
||
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ, |
||
10 |
கோள் நாய் கொண்ட கொள்ளைக் |
|
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே. | உரை | |
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.-அம்மூவனார்
|
98. குறிஞ்சி |
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் |
||
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி |
||
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி |
||
நூழை நுழையும் பொழுதில், தாழாது |
||
5 |
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, |
|
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் |
||
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்! |
||
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த் |
||
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி, |
||
10 |
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- |
|
வைகலும் பொருந்தல் ஒல்லாக் |
||
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே! | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.-உக்கிரப் பெருவழுதி
|
119. குறிஞ்சி |
தினை உண் கேழல் இரிய, புனவன் |
||
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், |
||
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் |
||
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை |
||
5 |
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
|
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை |
||
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் |
||
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு |
||
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் |
||
10 |
முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
|
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்
|
336. குறிஞ்சி |
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு |
||
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், |
||
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன், |
||
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, |
||
5 |
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, |
|
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட! |
||
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் |
||
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின் |
||
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி, |
||
10 |
இரை தேர் எண்கினம் அகழும் |
|
வரை சேர் சிறு நெறி வாராதீமே! | உரை | |
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்
|
386. குறிஞ்சி |
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல், |
||
துறுகட் கண்ணிக் கானவர் உழுத |
||
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர், |
||
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது, |
||
5 |
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன். |
|
'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ, |
||
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என, |
||
தெரிந்து அது வியந்தனென்-தோழி!-பணிந்து நம் |
||
கல் கெழு சிறுகுடிப் பொலிய, |
||
10 |
வதுவை என்று அவர் வந்த ஞான்றே. | உரை |
பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றன்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப
|
399. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
||
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
||
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
||
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
||
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
||
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
||
பெருமை உடையள் என்பது |
||
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? | உரை |
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல
|