முகப்பு |
குன்றியனார் |
50. மருதம் |
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் |
||
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் |
||
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து |
||
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப் |
||
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே. |
உரை | |
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. - குன்றியனார் |
51. நெய்தல் |
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர் |
||
நூல் அறு முத்தின் காலொடு பாறித் |
||
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை |
||
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்; |
||
எந்தையும் கொடீஇயர்வேண்டும்; |
||
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே. |
உரை | |
வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார் |
117. நெய்தல் |
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் |
||
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு |
||
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் |
||
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன் |
||
வாராது அமையினும் அமைக! |
||
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே. |
உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார் |
238. மருதம் |
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை |
||
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
தொண்டி அன்ன என் நலம் தந்து, |
||
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே. |
உரை | |
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன் |
301. குறிஞ்சி |
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் |
||
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக் |
||
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் |
||
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல், |
||
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் |
||
வாராதுஆயினும், வருவது போலச் |
||
செவிமுதல் இசைக்கும் அரவமொடு |
||
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே. |
உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன் |
336. குறிஞ்சி |
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர, |
||
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!- |
||
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் |
||
கடு மா நெடுந் தேர் நேமி போகிய |
||
இருங் கழி நெய்தல் போல, |
||
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே, |
உரை | |
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன் |