அருள்மிகு மண்டகப்பட்டு குடைவரைக் திருக்கோயில்
- கோவில் விவரங்கள்
- சிறப்புகள்
- செல்லும் வழி மற்றும் வரைபடம்
- காட்சிக்கூடம்
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :
பாதுகாக்கும் நிறுவனம் :
இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :
தளவானூர் குடைவரைக் கோயில், செஞ்சிக் கோட்டை
சுருக்கம் :
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளகுடைவரைக் கோயில் இலக்சிதன் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்குடைவரை கோயில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. இக்கோயில். தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. மிகவும் எளிய, எழில் வாய்ந்த குடைவரைக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.
காலம் / ஆட்சியாளர் :
கி.பி.7-ஆம் நூற்றாண்டு/ முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்
கல்வெட்டு / செப்பேடு :
இக்குடைவரைக் கோயிலில் உள்ள மகேந்திரவர்மனின் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல்லவ கிரந்த எழுத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, இந்தக் கோயிலை செங்கல், மரம், உலோகம், சுதை இன்றி நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன் என்று மகேந்திரவர்மன் கூறுவதாக குறிப்பிடுகிறது.
சிற்பங்கள் :
மும்மூர்த்திகளின் குடைவரைக் கோயிலின் வாயிலின் இருபுறமும் இரு வாயிற்காவலர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயிலின் அமைப்பு :
இக்குடைவரைக் கோயில் மூன்று கருவறைகளை உடையதாக இருக்கிறது. அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றை கொண்டள்ளது. அர்த்தமண்டபத்தில் இரண்டு அரைத்தூண்களும், இரண்டு முழுத்தூண்களும் உள்ளன. இரண்டு முழுத்தூண்களும் தரையில் இருந்து சதுரம், கட்டு, சதுரம் என உள்ளது. அவ்வாறே முகமண்டபமும் அமைக்கப்பட்டள்ளது. முகப்பின் இருபுறமும் அமைந்து உட்குழிவு வளைவில் இருபுறமும் வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். மேற்குப்புறத்தில் உள்ள அரைத்தூணில் பல்லவ கிரந்தத்தில் வடமொழி கல்வெட்டில் இக்குடைவரை லக்ஷிதாயனம் என பெயரிடப்பட்டுள்ளது.
அமைவிடம் :
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில், விழுப்புரம்
செல்லும் வழி :
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்திலிருந்து இருபதாவது கிலோமீட்டரில் வலப்புறம் பிரியும் மண்சாலை வழியே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம் :
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :
அருகிலுள்ள விமான நிலையம் :
சாலை வரைபடம்
படங்கள்
-
மண்டகப்பட்டு குடைவரை, குடைவரை முழுத்தோற்றம், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, மண்டபத்தூண்கள், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, முகமண்டபம், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, அர்த்தமண்டபம், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, வாயிற்காவலர், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, வாயிற்காவலர், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, மும்மூர்த்திகளுக்கான மூன்று கருவறைகள், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, கருவறை, மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, கருவறையின் தோற்றம், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, வாயிற்காவலர் முகம், மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு
-
மண்டகப்பட்டு குடைவரை, விசித்திரசித்தனின் கல்வெட்டு, மண்டகப்பட்டு, விழுப்புரம், கி.பி.7-ஆம் நூற்றாண்டு