Primary tabs
2.5 பாரத விடுதலை
பாரத நாட்டின் விடுதலையைப் பற்றிப் பாடிய கவிஞர்களுள்
பாரதியார் முதன்மையானவர். தூங்கிக் கிடந்த பாரதத்தைத் தம் உணர்ச்சிகரமான
பாட்டுகளால், தட்டி எழுப்பிய பெருமை பாரதிக்கு உண்டு’ என்பார்கள். வேறு
பலரும் விடுதலை இயக்கத்தைப் பற்றிப் பாடினர். ஆனால் பாரதி, நாட்டின் ஒற்றுமை,
அதனால் ஏற்படும் பலன், விடுதலை பெற வேண்டியதன் தேவை ஆகியவற்றையும் பாடினார்.
அத்துடன், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே தீர்க்க தரிசனமாக
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்
(சுதந்திரப் பள்ளு - பல்லவி)
என்று விடுதலை பெற்றுவிட்டதாகக் கனவு கண்டு ஆனந்தக் கூத்தாடினார் அமரகவி பாரதியார்.
வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?
தியாகிகளின் கண்ணீரை விட்டே வளர்த்தோம்.
கண்ணீரால் காத்தோம்
(சுதந்திர தாகம்- 1)
என்ற பாடலின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் பாரதியார்.
பறைய ருக்கும் இங்கு தீயர்,
புலைய ருக்கும் விடுதலை,
பரவ ரோடு குறவ ருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
(விடுதலை- 1)
என்று விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருக்கும் உரியது விடுதலை என்று வெளிப்படுத்துகிறார் பாரதி.
ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்பது மட்டும் அல்ல பாரதி விரும்பியது; இந்திய மக்களே தங்களுக்குள் சாதி, சமய, இன வேறுபாட்டால் ஒருவருக்கொருவர் அடிமையாய் இருந்தனர். இந்த, வழக்கத்தில் இருந்தும் விடுதலை பெறவேண்டுமென்று பாடுகிறார்.
விடுதலை பெற்றபின், சுதந்திர இந்தியா எத்தகைய மாற்றத்தைப் பெற வேண்டுமென்று அவர்கண்ட கனவையும் வெளிப்படுத்துகிறார்.
சுதந்திரத்தைத் தேவியாக உருவகித்து, எத்தனைத் துயரமடைந்தாலும் உன்னைத் தொழ மறக்கமாட்டேன் என அவர் பாடுவது இந்தியா சுதந்திரம் அடைந்தே தீரும் என அவர் திண்ணமாக நம்பியதைக் காட்டுகிறது. அவருடைய விடுதலை வேட்கை அவ்வாறு எண்ணத் தூண்டுகிறது. எனவே,
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே
(சுதந்திர தேவியின் துதி - 1 )
என்று பாடுகிறார்.
ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு நீங்க வேண்டும், உயர்ந்த சாதி, இழிந்த சாதி; ஆண், பெண் என்ற ஏற்ற தாழ்வு ஒழிய வேண்டும், மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வு வேண்டும் என்று பாரதி விரும்பினார். அந்த விருப்பத்தை அடைந்து விட்டதாகவே பாடி மகிழ்ந்தார்.
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது
இந்தியாவில் இல்லையே!
(விடுதலை-2)
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
(விடுதலை - 3)
எவ்வளவு நம்பிக்கையாகப் பாடியுள்ளார் பாருங்கள்! இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இவையெல்லாம் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். எனவே, இந்தியா விடுதலை பெற்று விட்டதாகவும், இந்திய மக்களைப் பற்றிய அவரது ஆசைகள் எல்லாம் நிறைவேறிவிட்டதாகவும் எண்ணிப் பெருமிதத்துடன் பாடுகிறார் பாரதியார்.
விடுதலை அடைந்து விட்டோம். அது சாதாரண சுதந்திரம் அல்ல. மகிழ்ச்சி தரும் ஆனந்த சுதந்திரம். அதை அடைந்து விட்டோம். எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம் என்று எவ்வளவு தன்னம்பிக்கையாக, தீர்க்கதரிசனமாகப் பாடி மகிழ்கிறார் பாரதியார்.