Primary tabs
பாடம் - 5
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துக்குரிய பாட்டுடைத் தலைவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன். அவனைப் பரணர் பாடியுள்ளவை இப்பத்துப் பாடல்கள். இவற்றின் கருத்துகளையும், இவற்றில் உள்ள செங்குட்டுவனைப் பற்றிய செய்திகளையும் இப்பாடம் அளிக்கின்றது.
செங்குட்டுவனின் வெற்றிகள், வரம்பற்ற கொடை, கலைகளைப் போற்றும் உள்ளம் ஆகியவற்றை இப்பாடத்தில் அறிந்து கொள்ளலாம்.
பதிற்றுப்பத்து என்னும் சேரர் இலக்கியம் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்ற நான்கைப் பெற்றிருக்கிறது. இதில் புறநானூற்றோடு வேறுபடுவதை இப்பாடத்தின் வழியறியலாம்.
சேரர்
இலக்கியமாகிய பதிற்றுப்பத்தின் சிறப்பை
அறியலாம்.
செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்தவன்
என்பதைப் பதிகத்தின் வழி அறியலாம்.
செங்குட்டுவன் தன் நண்பன் அறுகைக்காக மோகூர்ப்
பழையனை வென்ற வரலாற்றை அறியலாம்.
சங்கத் தமிழ் நடை குறிப்பாகப் பதிற்றுப்பத்தின்
நடையில் ஒரு பயிற்சி பெறலாம்.
சங்ககால அருஞ்சொற்கள் பலவற்றுக்குப் பொருள்
அறியலாம்.