தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    இக்காலத் தமிழ் இலக்கிய வகைகளுள் சிறுகதையும் ஒன்று. தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் புதுமைப்பித்தன். தமிழ்ச் சிறுகதை உலகம் அவர் காலத்திற்கு முன்பு கண்டிராத கதைப் பாத்திரங்களைப் படைத்ததன் மூலம் பாரதியாருக்குப் பின் தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் புதுமைப்பித்தன். அவர் கதைகளின் கதைப் பொருள்கள் விரிவானவை விறுவிறுப்புக் கொண்டவை; நுட்பமும் ஆழமும் கொண்டவை. வாழ்வியல் முரண்களைக் கதைகளாகப் படைப்பது புதுமைப்பித்தனின் பாணி. புதுமைப்பித்தனைப் பற்றியும் அவர் கதைகள் பற்றியும் இப்பாடத்தில் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:59:53(இந்திய நேரம்)