Primary tabs
-
பாடம் - 2
P10222 அண்ணாவின் உரைநடை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?இந்தப் பாடம் அறிஞர் அண்ணாவின் படைப்புகளையும் அவற்றின் நோக்கத்தையும் கூறுகின்றது; அண்ணாவின் உரைநடையின் தனித்தன்மைகளை விளக்குகிறது; அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கிய உத்திகளை எடுத்துரைக்கிறது; அண்ணா தமிழ் உரைநடைக்கு வழங்கியிருக்கும் பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?- அண்ணாவின் படைப்புகளையும் அவற்றின் நோக்கங்களையும் அறிந்து கொள்ளலாம்.
- அண்ணாவின் உரைநடையின் தனித்தன்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கிய உத்திகளை விளங்கிக் கொள்ளலாம்.
- அண்ணா தமிழ் உரைநடைக்கு வழங்கியிருக்கும் பங்களிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.