வைணவ பாசுரங்கள் அனைத்தும் 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன
என்பதும் அவை
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்ற
பெயரால்
வழங்கப்பட்டன என்பதும் குறிக்கப்படுகின்றன.
இப்பாடத்தில் மணிப்பிரவாள நடையில் வைணவர்கள்
எழுதிய உரைகள் தமிழுக்கு வளம்
சேர்த்ததும்
குறிப்பிடப்படுகிறது.
இந்தப்பாடத்தைப்
படிப்பதால்என்ன பயன் பெறலாம்?
திவ்வியப் பிரபந்தத்தின் விவரங்களைத் தொகுத்துக்
கொள்ளலாம்.
திவ்வியப் பிரபந்தத்தினை நாலாயிரம்
ஆகக்
கணக்கிடுவதில் அறிஞர்களிடையே உள்ள கருத்து
வேறுபாட்டையும் வைப்பு முறையையும் அடையாளம் காணலாம்.
திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்,
ஆழ்வார்கள்
அருளிய திவ்ய தேசங்கள், மாதிரிக்காக வைணவம்
தொடர்பான சில சொற்கள் உணர்த்தும்
பொருள்
என்பன போன்ற சில செய்திகளைப் பட்டியலிடலாம்.