Primary tabs
-
நம்மாழ்வார் இறைவனாலேயே நம் ஆழ்வார் என்று
அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவர் அருளிய
பாசுரங்கள் வேதத்தின் சாரம் எனப் புகழப்பட்டது.
வேதம் செய்த மாறன் என்ற பெயரும் இவருக்கு
ஏற்பட்டது. இவர் பாடிய பாசுரங்களின் பெருமை
இப்பாடத்தில் பேசப்படுகிறது. -
மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரையே தெய்வமாக எண்ணிப்
போற்றியவர். அவரைத்தவிர வேறு தெய்வமில்லையென,
திருமாலைப் பாடாமல் திருமால் அடியவராகிய
நம்மாழ்வாரைப் பாடி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக
எண்ணிப் போற்றப்பட்டவர். -
திருமங்கையாழ்வார் பாடிய ஆறு நூல்களைப் பற்றி
விரிவாகப் பேசுகிறது இப்பாடம். சிறிய திருமடல். பெரிய
திருமடல் என எழுதி மடல் இலக்கியத்திற்கு
முன்னோடியாக அமைந்த பெருமைக்கு உரியவர்
திருமங்கையாழ்வார்.
இவையனைத்தும் இப்பாடத்தில் விளக்கமாகப் பேசப்படுகின்றன.
-
நம்மாழ்வார் அருளிய திவ்வியப் பிரபந்தங்களின் சிறப்பை
உணர்ந்து கொள்ளலாம். -
மாறனின் பக்தி, தமிழை வளப்படுத்திய பாங்கு
ஆகியவற்றைத் திருவாய்மொழிவழி அடையாளங்
காணலாம். -
நம்மாழ்வாரைக் குருவாக ஏற்று அவரை மட்டும்பாடி
அடியார்க்கு அடியார் ஆன சீடன் மதுரகவியின்
பக்தியை இனங் காணலாம். -
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் அருளிய
திருவாய்மொழிக்குரிய சிறப்பை மற்றப் பகுதிகளுடன்
ஒப்பிட்டுப் பார்க்கலாம். -
திருமங்கை அருளிய பிரபந்தங்களில் உள்ள இலக்கிய
வகைகளைத் தொகுத்துக் கொள்ளலாம். -
நாயக நாயகி பாவத்தில் தோய்ந்த திருமங்கை நாயகியின்
புலப்பாட்டு உத்தியையும், கவிபாடும் திறனையும்
உணர்ந்து, பக்தி இலக்கியத்தின் தனித்தன்மையை
அடையாளம் காணலாம்.