Primary tabs
பாரதியார் வாழ்ந்த காலத்தில் நம் நாட்டில் வறுமை, அடிமைத்தனம், சாதிவேறுபாடு, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்ணடிமை, பயனற்ற கல்வி ஆகியவை மிகுந்து இருந்தன. இவற்றின் பயனாகச் சமூக நற்பண்புகளாகிய சமத்துவம், ஒற்றுமை, மனிதநேயம் போன்றவை அரிதாகவே இருந்தன. இவற்றைக் கண்டு பாரதியார் மிக வருந்தினார். இவை சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாய் இருந்தன என்பதை உணர்ந்தார். இவற்றைப் போக்குவதற்குரிய வழிமுறைகள் எவை என்பதைத் தம் பாடல்கள் வழியாக வெளிப்படுத்தினார். இது தொடர்பான செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.