Primary tabs
இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று.
இடம் - முதன்முதலாகக் கூடிய இடம்.
தலைப்பாடு - மீண்டும் அவ்விடத்தே வந்து கூடுதல்.
முதன்முதலாக இயற்கைப்புணர்ச்சியில் கூடி மகிழ்ந்த
தலைவன் (மீண்டும்) அடுத்த நாளும் அவ்விடத்தே வந்து
தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.
இடந்தலைப்பாடு மூன்று வகைப்படும். அவையாவன:
- தெய்வம் தெளிதல்
- கூடல்
- விடுத்தல்
முன்னே முதல்முறையாகத் தலைவியை நம்மோடு
கூட்டி வைத்த தெய்வம் மறுபடியும் அதே இடத்தில்
தலைவியை நம்மோடு சேர்த்து வைக்கும் என்று தலைவன்
தெளிவுடன் உரைப்பது.
அவ்வாறே தலைவன், தலைவியைக் கூடி மகிழ்தல்.
கூடி மகிழ்ந்த பிறகு தலைவியை அவளது தோழியர்
கூட்டத்தின்பால் செல்லுமாறு தலைவன் அனுப்பி வைத்தல்.
இம்மூவகைப்பட்ட இடந்தலைப்பாட்டு நிகழ்ச்சியையே
ஐந்து நிலைகளாக விரிவுபடுத்தியும் வழங்குவர். அவையாவன
- தந்த தெய்வம் மீண்டும் தரும் எனச் செல்லுதல்
- தன் முன்னே தலைவியைக் காணுதல்
- கூடி மகிழ்தல்
- புகழ்தல்
- தோழியர் கூட்டத்தில் தலைவியைச் சேர்த்தல்.