தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D03111-விடை


தன் மதிப்பீடு - II : விடைகள்

4.

பாங்கி வெளிப்படுத்தும் மூவகைப் புணர்ச்சிகள் யாவை?

செவிலியிடம் அறத்தொடு நிற்கும் பாங்கி, தலைவியின்
காதல் மலர்ந்து களவு ஒழுக்கம் நிகழ்ந்ததற்கான இயல்பான
சூழ்நிலைகளாக மூவகைப் புணர்ச்சிகளைக் குறித்துச்
சொல்வாள். அவை யாவன:

1) பூத்தரு புணர்ச்சி : தலைமகன் தலைவியின் கூந்தலில்
மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத்
தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.

(2) புனல் தரு புணர்ச்சி : தலைவி ஆற்று வெள்ளத்தில்
மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில்
இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல்
தலைவனாகக் கொள்ளுதல்.

(3) களிறு தரு புணர்ச்சி : தலைவி தினைப் புனம் காவல்
புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில்
இருந்து     தன்னைக்     காத்த     தலைவனையே
தனக்குரியவனாக உள்ளத்தளவில் முடிவு செய்தல்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 11:48:33(இந்திய நேரம்)