Primary tabs
ஒருவயின் நின்றும் பலவயின் பொருள் தரின்
தீவகம்; செய்யுள் மூவிடத்து இயலும்
1) முதல் நிலைக் குணத் தீவகம்
2) முதல் நிலைத் தொழில் தீவகம்
3) முதல் நிலைச் சாதித் தீவகம்
4) முதல் நிலைப் பொருள் தீவகம்
5) இடைநிலைக் குணத் தீவகம்
6) இடைநிலைத் தொழில் தீவகம்
7) இடைநிலைச் சாதித் தீவகம்
8) இடைநிலைப் பொருள் தீவகம்
9) கடைநிலைக் குணத் தீவகம்
10) கடைநிலைத் தொழில் தீவகம்
11) கடைநிலைச் சாதித் தீவகம்
12) கடைநிலைப் பொருள் தீவகம்
1.4.4 முதல் நிலைத் தீவகம்
எடுத்துக்காட்டு:
ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து
அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவைசிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள்சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிமை உடைய வில் பொழிந்த அம்புகளும் சிவந்தன;குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.
அணிப் பொருத்தம் :
இப்பாடலில் முதலில் நிற்கும் 'சேந்தன' (சிவந்தன)என்பது நிறம் பற்றிய குணச் சொல் (பண்புச் சொல்) இது.
தெவ்வேந்தர் தோள் சேந்தன
குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன
அம்பும் சேந்தன
மிசைஅனைத்தும் சேந்தன
புள் குலமும் சேந்தன
1.4.5 இடை நிலைத் தீவகம்
எடுத்துக்காட்டு:
வடுக்கொண்டு உரம் துணிய, வாளி - தொடுக்கும்
கொடையும், திருவருளும், கோடாத செங்கோல்
நடையும் பெரும்புலவர் நா
அரசன் தன்னை எதிர்த்த பகைவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் புண்பட்டு மார்பு பிளக்குமாறு, தான் எடுத்த வில்லிலிருந்து அம்புகளைத் தொடுப்பான். அவ்வளவிலே,புலவருடைய நாவானது, அவனுடைய ஈகையையும், சிறந்தஅருளையும், வளையாத செங்கோல் சிறப்பையும் பாடல்களில்தொடுக்கும் (தொடுத்துப் பாடும்).
அணிப் பொருத்தம் :
இப்பாடலில் இடையில் வந்த 'தொடுக்கும்' என்னும்சொல் தொழில் பற்றிய சொல்லாகும். இச்சொல்,
பெரும்புலவர் நாத் தொடுக்கும்
1.4.6 கடை நிலைத் தீவகம்
எடுத்துக்காட்டு:
திறத்தன, கொல்சேரி யவ்வே, - அறத்தின்
மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி
முகனை முறைசெய்த கண்
இப்பாடலின் பொருள் :
அறத்திற்காக மகனையே தேர்க்காலில் கிடத்தி அவன்மீது
தேரைச் செலுத்திக் கொன்று முறை செய்த மனுநீதிச்சோழனுக்கு உரிய வஞ்சி
என்னும் ஊரில் வாழும்தலைவியின் முகத்தை அழகு செய்த கண்கள் வெளியில் உள்ளமான்களுடைய
கண்களைப் போன்றும், ஊரில் உள்ளஅம்புகளைப் போன்றும், நீரில் உள்ள தாமரை
மலர்களைப்போன்றும், மாமரத்தில் உள்ள வடுக்களைப் போன்றும்,கொல்லன் சேரியில்
உள்ள வாள்களைப் போன்றும் இருக்கின்றன.
அணிப் பொருத்தம் :
இப்பாடலில் இறுதியில் வந்துள்ள 'கண்' என்பதுபொருளைக்
குறிக்கும் பெயர்ச்சொல். இது பாடலின் பலஇடங்களிலும் உள்ள 'புறத்தன, ஊரன,
நீரன, மாவின்திறத்தன, கொல்சேரிய,' ஆகிய சொற்கேளாடு தனித்தனியேஇணைந்து
நின்று பொருள் விளக்கம் செய்தமையால்கடைநிலைப்
பொருள் தீவக அணியாகும்.