Primary tabs

ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப
எடுத்துக்காட்டு:
குறைபடுதேன் வேட்டும் குறுகும்; -நிறைமதுச்சேர்ந்து,
உண்டாடும் தன்முகத்தே, செவ்வி உடையது,ஓர்
வண்தா மரைபிரிந்த வண்டு
காவி - கருங்குவளைப்பூ; வேட்டும்- விரும்பி;
குறுகும் - சேரும்; மது - தேன்; தன்முகத்தே - தன்னிடத்து;
செவ்வி - வனப்பு; வண்தாமரை - வளமான தாமரை மலர்.)
பாடலின் பொருள்:
வனப்பையும் வளமையையும்
உடைய தாமரை மலரில் குறைவற்ற நிறைந்த தேனை உண்டு களித்து விளையாடுகின்ற
ஆண் வண்டானது, பல வண்டுகள் சேர்ந்து உண்டு வெறுத்து விட்ட ஒரு கருங்குவளைப்
பூவில் உள்ள குறைபட்ட தேனை ஆசைப்பட்டுச் சேருகின்றதே!
- அணிப்பொருத்தம்
கவிஞர் கூறக் கருதிய பொருள் இதுவன்று; வேறு
ஒன்றாகும். அதனை இப்பாடலில் வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறுகிறார்.
மறைத்துக் கூறும் அப்பொருள் வருமாறு:
வனப்பையும் வளப்பத்தையும் உடைய தலைமகளிடத்தில்
குறைவற்ற நிறைந்த இன்பத்தைத் துய்த்து மகிழ்ந்த தலைமகன், அவளை விட்டு
நீங்கி, பலரும் துய்த்து வெறுத்து விலக்கிய ஒரு பரத்தையினது குறைவாகிய
இன்பத்தை விரும்பி அவளைச் சேர்கின்றானே''
இவ்வாறு கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து, அதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைக் கூறி, அதன் வாயிலாக வெளிப்படுத்தியமையால் இப்பாடல் ஒட்டு அணியாயிற்று. இங்கு உவமானம் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது; உவமேயம் குறிப்பாகப் பெறப்படுகின்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமம் அல்லது உவமப் போலி என்பது அகப்பொருள் பாடல்களில் மட்டும் பயின்று வரும். தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும். மேலே ஒட்டு அணிக்குச் சான்றாகத் தண்டியலங்கார ஆசிரியர் காட்டிய ''வெறிகொள் இனச்சுரும்பு'' என்று தொடங்கும் பாடல், மருதத் திணைக்கு உரிய தாமரைமலர், காவிமலர் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டிருப்பதைக் காணலாம். தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணரும் இப்பாடலையே காட்டியுள்ளார்.
அகப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியை 'உள்ளுறை உவமம்' என்றும், புறப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியைப் 'பிறிது மொழிதல் அணி' என்றும் இலக்கண விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் வேறுபடுத்திக் கூறுகின்றார்.
திருக்குறள், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி போன்ற தமிழ் இலக்கியங்களில் பிறிது மொழிதல் அணி மிகுதியாகப் பயில்கிறது. திருவள்ளுவர் திருக்குறளில் பல குறள்பாக்களில் பிறிது மொழிதல் அணியைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இத்திறத்தை ஒரு திருக்குறள் வழிநின்று காண்போம்.
சால மிகுத்துப் பெயின்
அச்சு - அச்சாணி; சால- மிகவும்.)
பாவின்
பொருள்:
மென்மையான மயில் இறகு ஏற்றிய வண்டியே ஆனாலும்,
அந்தப பண்டத்தை அளவோடு ஏற்றாமல் அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால் வண்டியின்
அச்சு முறிந்து போகும்.
- அணிப்பொருத்தம்
திருவள்ளுவர் கூறக் கருதிய பொருள் இதுவன்று.
''ஓர் அரசன் தன் பகைவர்கள்
தன்னைக் காட்டிலும் வலிமையில் குறைந்தவர்கள் என்று
கருதி, அவர்கள் மீது ஆராயாமல் போர் தொடுத்தால் அவர்கள் அனைவரும் ஒன்று
திரண்டு கூடி அவனை எதிர்த்துப் போரிடும் பொழுது அந்த அரசன் தன் வலிமை
கெட்டு அழிந்து போவான்.''
இதுவே வள்ளுவர் கூறக் கருதிய பொருள். ஆனால்
இதனை வெளிப்படையாகக் கூறாமல் மறைத்து இதைப் புலப்படுத்துவதற்காக இதனோடு
ஒத்த வேறு ஒரு பொருளைக் கூறினமையால் இக் குறள்பா பிறிது மொழிதல் அணியாயிற்று.