Primary tabs

அஞ்சினார் அஞ்சாது போய் அகல்க - வெஞ்சமத்துப்
பேராதவர் ஆகத்து அன்றிப் பிறர்முதுகில்
சாரா என் கையில் சரம்
பேராதவர் - புறமுதுகு காட்டி ஓடாதவர்கள்;
ஆகம் - மார்பு; சரம் - அம்பு.)
இப்பாடலின் பொருள்
கொடிய போரில் எனக்கு எதிராக நின்று போர் செய்து, தமது இனிய உயிரைக் காப்பாற்றிக்கொண்டு பிழைத்து மிஞ்சியவர் ஒருவரும் இல்லை. ஆகவே அஞ்சியவர்கள் விலகிப் போவதற்குச் சிறிதும் அஞ்சாமல் விலகிச் செல்க. என் கையால் செலுத்தப்படும் அம்புகள் புறம் காட்டி ஓடாதவர்களின் மார்பில் பாயுமே அல்லாமல் புறம் காட்டி ஓடுபவர்களின் முதுகில் பாயமாட்டா.
. அணிப்பொருத்தம்